தரம் 6 இல் கற்கும் மாணவி, ஹம்தா சீனத்தின் சிறந்த முன்மாதிரி
(பி.எம்.எம்.ஏ. காதர்)
மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் தரம் 06 இல் கல்வி கற்கும் மாணவி பாத்திமா ஹம்தா சீனத் சமீம், ஒரு வருடத்திற்கான தினகரன் பத்திரிகையை தனது பாடசாலைக்கு அன்பளிப்பு செய்ய முன்வந்துள்ளார்.
தானும் சக மாணவர்களும் பயன்பெறும் வகையில், பத்திரிகை வாசிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன், தான் கற்கும் பாடசாலைக்காக இவ்விடயத்தை செய்ய முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்காக தினமும் பெற்றோர் தனக்கு பாடசாலை உணவுக்காக வழங்கும் பணத்திலிருந்து ரூபா 20 இனை ஒதுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் அதிபர் ஏ.ஆர். நிஃமத்துல்லாவிடம், பாத்திமா ஹம்தா சீனத் சமீம், தினகரன் பத்திரிகையின் பிரதியொன்றை கையளித்தார்.
தினகரன் பத்திரிகை அண்மையில் தனது 85 வருட பூர்த்தியை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment