Header Ads



இரத்தினபுரி பள்­ளி­வாசல் வாகன தரிப்பிடத்தை, மீட்டுத்தருமாறு கோரிக்கை

-விடிவெள்ளி-

இரத்­தி­ன­புரி ஜன்னத் ஜும்ஆ பள்­ளி­வாசல் உப­யோ­கித்து வந்த வாகன தரிப்­பி­டத்தை இரத்­தி­ன­புரி மாந­கர சபை கையேற்று கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக மூடி­வைத்­தி­ருப்­ப­தா­கவும் அதனை மீட்டு மீண்டும் பள்­ளி­வா­சலின் உப­யோ­கத்­துக்கு ஆவன செய்­யு­மாறும் பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை நகர திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் அமைச்சர் ஹக்கீம், முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் ஹலீம் ஆகி­யோரை நேரில் சந்­தித்து கோரிக்கை விடுத்­துள்­ளது.

இச்­சந்­திப்பு நேற்றுமுன்தினம் பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் இடம்­பெற்­றது.

பள்­ளி­வா­ச­லுக்கும் இரத்­தி­ன­புரி சுப்பர் மார்கட் ஒன்­றுக்கும் இடையில் அமைந்­துள்ள வாகன தரிப்­பி­டத்தை மாந­கர சபை மூடி­வைத்­துள்­ளதால் பள்­ளி­வா­ச­லுக்கு வரு­கை­தரும் முஸ்­லிம்­களும் பொது மக்­களும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கு­வ­தா­கவும் இதனை மீட்­டுத்­த­ரு­மாறும் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் அமைச்சர் ரவூப் ஹக்­கீமை வேண்­டி­னார்கள். 

இத­னை­ய­டுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ஹலீமைச் சந்­தித்து உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு வேண்­டுகோள் விடுத்தார்.

அமைச்சர் ஹலீம் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பாவைத் தொடர்பு கொண்டு வாகன தரிப்­பி­டத்தை பள்­ளி­வா­ச­லுக்கு மீட்­டுத்­த­ரு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். 

அமைச்­சர்­க­ளு­ட­னான சந்­திப்பில் இரத்­தி­ன­புரி ஜன்னத் ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலைவர் எம்.ஒ.எம்.இப்­றாஹிம் உட்பட நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரத்தினபுரி, பதுளை மாவட்ட இணைப்பாளர் பி.தாஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.