Header Ads



சூடுபிடிக்கும் CALL

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசூரியவை விரைவில் சந்திக்கவுள்ளனர்.
கடந்த சில தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்திவரும் பொலிஸ்மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பு குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் தற்போது இடம் பெற்றுவரும் குழுநிலை விவாத்தில் வைத்தே சபாநாயகர் மற்றும் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் பூஜித்தை இன்றைய தினம் சந்திக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பூஜித்திற்கு வந்த குறித்த தொலைபேசி அழைப்பின் போது நிதி மோசடி விசாரணை பிரிவு, நிலமே என்பவற்றை தொடர்புப்படுத்தி உரையாற்றியுள்ள காணொளிப்பதிவு தொடர்பாக இந்த வாரம் விளக்கமளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.