Header Ads



முஸ்லிம் மாணவிகளை, அச்சுறுத்தியதை ஏற்கமுடியாது - நசீர் அஹமட்

திருகோணமலையில் உள்ள குறிப்பிட்ட சில பாடசாலைகளில்  முஸ்லிம் மாணவிகள் பர்தா மற்றும் ஹிஜாப் அணியக்கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர்கள் சிலர்  அச்சுறுத்தியுள்ளதாக அறிவதாகவும் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இச் சம்பவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளேன். நாளை முதல் அவர்கள் எவ்வித தடையும் இன்றி பரீட்சை எழுத செல்லாம். இனிமேலும் இவ்வாறான நடவடிக்கைளில் எவராவது ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். 

கிழக்கு மாகாணத்தில் மத கலாசார உரிமைகளை   மதிக்காத வகையில் செயற்படும் எவராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும்   குறிப்பிட்டார்.

திருகோணமலையில் முஸ்லிம் மாணவிகள் சிலரின் உரிமைகளை மறுக்கும் வகையில்  பரீட்சை மேற்பார்வையாளர்கள் நடந்து கொண்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெளிவுப்படுத்திய போதே அவர் இதனைக் கூறினார்.

  ஒவ்வொருவரது மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை  அணிவதற்கும் அவர்களின் மத கலாசரங்களை பின்பற்றுவதற்குமான உரிமை  இலங்கையின் அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே அரசியல் யாப்புக்கு முரணாக நடந்து கொண்டால் அவர்கள் மீது சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

  திருகோணமலை பாடசாலையில் இன்று இடம்பெற்ற சம்பவம் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் அது தொடர்பில்  கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்து இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் பதிவாகாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . கிழக்கில் இனவாத செயற்பாடுகளுக்கு 

1 comment:

Powered by Blogger.