Header Ads



டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையால், இஸ்லாம் வீறுகொண்டு எழும்...!

-மு.மு,மீ-

சவூதி அரேபியாவில் முஸ்லிமாக வாழ்வது பெரிதல்ல, துபாயில் முஸ்லிமாக வாழ்வது பெரிதல்ல, அங்கு வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு தேவையற்ற மன உளைச்சல்களும், தேவையற்ற செலவுகளும் இருப்பதில்லை.

காலையில் எழுந்தால் ஐவேளை தொழுது கொண்டு, வேலைக்கு சென்று சம்பாதித்து, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அன்றைய தினத்தை கழித்து மீண்டும் இரவில் நிம்மதியாக உறங்கும் நிலையில் அங்குள்ள முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

அங்கு வாழும் முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்த வேண்டியதில்லை, பள்ளிவாசலை மீட்பதற்காக ஒவ்வொரு வருடமும் போராட்டம் நடத்த வேண்டியதில்லை, மாட்டிறைச்சிக்காக முஸ்லிம்கள் கொல்லப்படுவதில்லை, விநாயகர் ஊர்வலத்தின்போது முஸ்லிம்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உயிருக்கு அஞ்சி வாழக்கூடிய அவசியம் இல்லை, முஸ்லிம்கள் திருமணம், விவாகரத்து போன்ற சொந்த காரியங்களுக்கு தனியார் சட்டத்திற்காக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

சவூதி அரேபியா, துபாயில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதுபோல் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடிவதில்லை.

அதை விட கொடுமையானது நரேந்திர மோடி, டொனால்ட் ட்ரம்ப் போன்ற முஸ்லிம் விரோத சக்திகளின் ஆட்சியின் கீழ் வாழ்வது நினைத்து பார்க்க முடியாத துயரங்களாகும். இஸ்லாமிய விரோதிகளின் ஆட்சியின் கீழ் ஈமானோடு வாழும் அமெரிக்க, இந்திய முஸ்லிம்களின் மனநிலை சவூதி, துபாய் முஸ்லிம்களின் மனநிலையை விட வலிமை வாய்ந்ததாக இருக்கும்.
அதேசமயம் இன்று நாம் சந்திக்க துயரங்களை விட ஆயிரம் மடங்கு, லட்சம் மடங்கு, கோடி மடங்கு துயரங்களை சவூதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்து விட்டார்கள்.

மக்காவிலுள்ள கஅபா ஆலயத்தில் 300 க்கும் மேற்பட்ட சிலைகளை வணங்கிக்கொண்டு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற குல பாகுபாடு பார்த்துக்கொண்டு, கருப்பன் வெள்ளையன் என்ற நிற பாகுபாடு பார்த்துக்கொண்டு வாழ்ந்த காட்டு மிராண்டி அரபு கூட்டங்களிடம்,

இஸ்லாத்தை மறு புனர் நிர்மாணம் செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை சொல்லி ஆயிரக்கணக்கான சிலைகளை வணங்கிய மக்களை அவர்களின் கைகளாலேயே உடைத்து நொறுக்கி உலகை படைத்த ஒரே இறைவனை வணங்க வைத்தார்கள்.

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற குல பாகுபாட்டை தகர்த்தெறிந்தார்கள். கருப்பன் வெள்ளையன் என்ற நிற பாகுபாட்டை வேரோடு பிடுங்கி எறிந்தார்கள்.

இன்று நாம் பார்க்கக்கூடிய இஸ்லாமிய விரோத சக்திகளான நரேந்திர மோடி, டொனால்ட் ட்ரம்ப் போன்றவர்களின் அப்பனுக்கெல்லாம் அப்பன் அரபி காட்டு மிராண்டி கூட்டங்கள் அன்று முஸ்லிம்களுக்கு காட்டாத எதிர்ப்பா ?

பின்னர் மக்கா, மதினா நகரம் மட்டுமல்ல முழு சவூதி அரேபியாவும் இஸ்லாமிய மயமானது. பின்னர் அரபுலகம் முழுவதையும் இஸ்லாம் ஆட்கொண்டது.

கொடுங்கோல ஆட்சியாளன் பிர்அவ்னையே கண்டு விட்ட சமுதாயம் நரேந்திர மோடியையும், டொனால்ட் டிரம்பையும் சந்திப்பது எந்த வகையிலும் பின்னடைவை ஏற்படுத்தி விடப்போவதில்லை.

முஸ்லிம்களுக்கு நரேந்திர மோடியின் வெற்றியோ, டொனால்ட் டிரம்பின் வெற்றியோ கொசுக்கடி அளவுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தாது.

மாறாக எண்ணற்ற நல்லவைகள் அறியாத புறத்திலிருந்து அல்லாஹ்விடமிருந்து ஏற்படும்.

ஜார்ஜ் புஷ்ஷின் நடவடிக்கையால் அமெரிக்காவில் இஸ்லாம் வீறுகொண்டு எழுந்தது. இப்போது அதே ஜார்ஜ் புஷ்ஷின் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையால் இன்னும் ஆயிரம் மடங்கு இஸ்லாம் வீறுகொண்டு எழும்.

மேலும் தகுதி அற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுவது மறுமை நாளின் அடையாளம் என்று இறைவனின் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிவிட்டார்கள்.
அண்ணலம் பெருமானாரின் வார்த்தைகள் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.

7 comments:

  1. முதலில் உன்னைப் புறக்கணிப்பார்கள். பிறகு உன்னைப் பார்த்து சிரிப்பார்கள். பின்னர் உன்னோடு சண்டையிடு வார்கள். கடைசியாக நீதான் ஜெயிப்பாய்’ - by Donald
    Trump

    ReplyDelete
    Replies
    1. Pirabaharanai paarthu M.G.R cooriyathai ponraa? Umakkum serthuthaan trumpet vaasikiraan that womanizer.

      Delete
  2. சரியான விடங்களை செய்கிறவர்கள் எவரும் ஒருவருக்கும் எந்த நிலையிலும் பயப்படதேவையில்லை. By: Donald Trump

    ReplyDelete
    Replies
    1. Prabaharanum sariyaana vidayathai thaan seithaar, kadaisiyil💀👻.

      Delete
  3. Well v don't need worry about these guys.but v should be a gd muslim.otherwise sorry.com

    ReplyDelete
  4. இந்த முறை அமெரிக்காவில் யார் வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? நேற்றிரவு பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் கேட்டார்.

    ‘டொனால்ட் ட்ரம்ப்’ என்றேன்.நான் ஹிலாரி என்று கூறுவேன் என்று எதிர்பார்த்திருப்பார் போல.

    “அவன் முஸ்லீம்களைப் பற்றி என்ன சொல்கிறான் என்று தெரிந்தும் ஏன் அவன் வரவேண்டும் என்கிறீர்கள்’’ என்று கேட்டார்.

    அவருக்கு விளக்கினேன்.
    “நாம் முஸ்லீம்கள்.நமக்கு ஹிலாரி வந்தால்தான் என்ன.ரம்ப் வந்தால்தான் என்ன.இருவரும் முஸ்லீம்களுக்கு எதிராகத்தான் செயற்படப்போகிறார்கள். இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கப்போகிறார்கள்.ஒரு முஸ்லீம் என்ற ரீதியில் இவர்கள் இருவரால் இஸ்லாத்திற்கு ராஜதந்திர ரீதியாக நன்மை பயக்கக்கூடியவர் யார் என்பதை நாம் ஆராய வேண்டும்.அது எனக்கு ரம்ப் போல் தெரிகிறது’’ என்றேன்.

    ‘’முஸ்லீம்கள் குடியேறுவதை மொத்தமாகத் தடுக்க வேண்டும் என்று சொல்லும் இவன் ஜனாதிபதியாக வருவதால் இஸ்லாத்திற்கு எப்படி நன்மை கிட்டும்” சற்று அவர் முகம் சிவந்தது.அரசியல் அடிப்படை தெரியாத ஒரு முட்டாளோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்று என்னைப்பற்றி நினைத்திருப்பார் போல.

    தொடர்ந்து விளக்கினேன்.
    ‘’ரோம சாம்ராஜ்யத்தில் கலிகுலா என்றொரு அரசன் இருந்தான்.ஒரு கேவலமான ஆட்சியாளன் அவன்.தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவன்.தனக்காக கட்டடங்கள் கட்டிக்கொண்டும் தனது நெருக்கமானவர்களைக் கொலைகள் செய்து கொண்டு, திரிந்தவன்.ஊழல்,ரத்த உறவுகளோடு விபச்சாரம்,அதீதமான செலவீனம் என்று ரோம சாம்ராஜ்யத்தின் கஜானாவைக் காலி செய்தவன். இறுதியில் தன் சொந்தக் காவலர்களாலேயே அவன் கொல்லப்பட்டுவிட்டான். வரலாற்றாசிரியர்கள் அவனைப் பைத்தியக்காரன் என்கிறார்கள்.

    டொனால்ட் ட்ரம்புக்கும் கலிகுலாவுக்கு அதிக வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ட்ரம்ப் ஒரு கோமாளியாகப்பார்க்கப்பட்டவர்.முதல் சுற்றுலேயே தொலைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் இத்தனை தூரத்திற்கு வந்ததே ஆச்சரியம்.
    அவர் ஒரு அதீத கோபக்காரர், நிதானமில்லாதவர்.அரசியல் அனுபவம் இல்லாதவர்.வெற்றிகரமாக ஒரு நிறுவனத்தை நடத்துவதால் நாட்டையும் நடத்தலாம் என்று நினைப்பவர்.ரெஸ்லிங்க்,பிளேபோய், என்று அனுபவிப்பவர்.’இவங்கா ட்ரம்ப்’ தனக்கு மகளாக இல்லாவிட்டால் தான் அவரோடு டேடிங் செய்திருப்பேன் என்று கூறியவர்.அழகில்லை என்று பெண் ஊழியர்களை விலக்கியவர்.

    அத்தோடு அவர் ஒரு இனவாதி.கறுப்பர்களுக்கு எதிரானவர்.ஏற்கனவே அமெரிக்காவில் கறுப்பு-வெள்ளைப் பிரச்சினை நன்றாக தீப்பற்றி எரிகிறது.இவர் நிச்சயமாக அதற்கு எண்ணெய் ஊற்றுவார்.அது நன்றாகப் பற்றி எரியும்.ஒரு உள்நாட்டு கலகத்திற்கு அது இட்டுச் செல்லும்.

    ஏற்கனவே மெக்ஸிகோவோடு அவர் பிரச்சினைப்பட்டிருக்கிறார்.பிரிட்டன் இவரை வெறுக்கிறது.இவரது வாயால் பல சர்வதேசப் பிரச்சினைகள் உருவாக வாய்ப்பிருக்கிறது.
    வழமைக்குமாறாக ரஷ்யாவோடும் சீனாவோடும் ராஜ தந்திர உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்.இது அமெரிக்காவின் வெளிநாட்டு உறவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.பெண்களை மிகவும் இழிவாகப் பேசுகிறார். பெண்ணிலை வாத அமைப்புகள் எதிர்க்க ஆரம்பிக்கும். விட்டுக்கொடுக்காத பண்பு கொண்டவர் என்பதால் கலந்துரையாடல்களை விரும்பமாட்டார்.யார் எதிர்த்தாலும் முடிவுகளைத் தான்தோன்றித்தனமாக எடுக்க முனைவார்.அவருக்கு ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் ஆசை காட்டி ஒப்பந்தங்கள் செய்யும் போது முஸ்லீம்கள் மீதான வெறுப்பை யுத்தமாக மாற்றி லாபம் சேர்க்க நினைப்பார்.அமெரிக்காவின் பொருளாதாரம் வீழும்.அவர் தற்போது ஈரான் மீது காட்டும் ஒரு வெறுப்பு உண்மையாக இருந்தால் சுன்னி முஸ்லீம்களுக்கு அது சாதமாக முடியலாம்.

    ஆனால் ஹிலாரி அப்படியல்ல.வழமையான ஜனநாயகக் கட்சிக்காரர்.இதுவரைக்கும் எந்த ஜனாதிபதியும் கொண்டிராத சர்வதேச அரசியல் அனுபவம் கொண்டவர்.அவர் தெரிவுசெய்யப்பட்டால் வழமையான ஒரு ஜனநாயக கட்சிக்காரர் ஆட்சி செய்வதைப் போல் ஆட்சிசெய்வார்.

    ஆனால் ட்ரம்பிடம் இதுவரைக்கும் எந்த ஜனாதிபதி வேட்பாளரிடமும் வெளிப்படையாகத்தெரியாத முட்டாள்தனம் இவரிடம் தெரிகிறது.ஹிலாரியால் அமெரிக்க வழைமைபோல் இருக்கும்.ட்ரம்பால் அமெரிக்கா அழியும்.இப்பொழுது கூறுங்க ஒரு முஸ்லீமின் பார்வையில் எவர் வெல்ல வேண்டும்?

    ‘ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு பிரச்சினை வருமே? என்றார் நண்பர் கவலையோடு.

    ‘’சிங்கத்தின் குகைக்குள் நிழல் சுகம் தேடிப்போய்விட்டு தன் காலை சிங்கம் கடித்துவிட்டது என்று மான் முறையிடுவது நியாயமில்லையே என்றேன்’’

    அவர் கென்வின்ஸ் ஆகவில்லை.

    AHM.

    ReplyDelete
  5. What is the point for looking for destruction in US ? US has nothing to do anything with Islam you sick people. They are meddling in middle east countries because of economical and political interests and improper foreign policies of the ruling parties.

    We should congratulate Donald Trump for his victory over the dangerous women.

    Americans are awake, US media failed in their biased intention to bring Hillary to power. The witch who poisoned middle east and hijacked Arab spring in her favor, lost the election against an incompetent.

    She came , she saw (Gadhafi dying and dragged in streets by misguided Libyans) and now, she is no more in international politics.

    The countries and leaders who donated to Clinton foundation a lot in millions, are in shock without a word to congratulate the winner.

    Saudi and Qatar paid all the Hillori's election expenses. Saudi even appointed the director of Hillori's media campaign as per the leaked news in wiki leak. Saudi, Qatari, NATO and Europe countries are in panic. There is no reason for others to be panic about Trump's victory.

    Anyway, mistreatment towards minorities specially against Arab and Muslim by radicals, may raise in US.

    But, Trump is going to work with Russia, Iran and even with Syria to wipe-out ISIL and all other Islamic terrorism from this earth. Today, one of his adviser announced in RT (RT.com) news that the first steps to tackle the terrorism is to stop the US weapon flow to terrorist in Syria and they are going to bring all US army personal back to home, who are currently working in Syria as an adviser to the terrorists.



    ReplyDelete

Powered by Blogger.