Header Ads



அமைதியா இருந்தால், இராணுவப் புரட்சி வெடிக்கும் - பாராளுமன்றத்தில் மைத்திரிக்கு எச்சரிக்கை

இப்படியே அமைதியாக இருந்தீர்களாயின் இராணுவ புரட்சியினை சந்திக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று -19- உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி என்ற பெயரில் தற்போது முறையான செயற்பாடுகள் இடம் பெற்று கொண்டிருக்கின்றது, இது தொடர்பில் ஜனாதிபதி கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது, இப்போது நாட்டில் சூழ்ச்சிகள் நிறைந்து காணப்பட்டு வருகின்றது. பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு அமைய எமக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றவும் சரியான நேரம்கொடுக்கப்படுவதில்லை.

மேலும், ஜனாதிபதி இருக்கும் போதே இதனை தெரிவித்து கொள்கின்றேன், நாடு தொடர்பில் அவதானமாக இருங்கள் இராணுவ புரட்சி ஒன்று ஏற்படும் சாத்தியக் கூறுகள் தற்போது இருக்கின்றது எனவும் தினேஸ் குணவர்தன எச்சரிக்கை ஒன்றினையும் விடுத்தார்.

இதேவேளை தினேஸ் குணவர்தன உரை நிகழ்த்தும் போது பாராளுமன்றத்தில் பலரும் பல்வேறு வகையான கோஷங்களை எழுப்பி சபை நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. நகைச்சுவை நடிகர் விவேக் ஒருபடத்தில் இன்டர்வை நடாத்தி ஒருவரிடம் கேள்விகேட்பார் நீங்கள் எதுவரை படித்துள்ளீர் என்று அவர் நான் எதுவுமே படிக்கவில்லை என்பார் அப்படியென்றால் நீங்கள் அரசியலுக்கு செல்லலாம் என்று கூறி அவரை அனுப்புவார் விவேக் நமக்கு உணர்தியது போன்ற அரசியல் வாதிகள்தான் தற்போது நமது நாட்டு பாரலுமன்றத்தில் அதிகம் இருக்கின்றார்கள்.

    ReplyDelete
  2. IDU UNGHAL PAHAL KANAWU.INSHA ALLAH PALIKKATHU

    ReplyDelete
  3. The first victims of "good governance" are, My3 and Ranil.
    It is true that we need to establish good governance but
    not at this rate ! Allowing Rajapakshas to engage in
    politics to work against good governance is itself a bad
    omen ! You can't allow a big enemy in the open and act
    against their interest . This country is heading in a
    bad direction like headless chicken.

    ReplyDelete
  4. சினிமா அரசியல் இவை இரண்டும் சாக்கடைகள். இவற்றிலிருந்து தப்புவது தான் முஸ்லிம்களுக்கு கஷ்டமாக உள்ளது.

    ReplyDelete
  5. எவ்வாறு பயங்காட்டினாலும் இவர் அசைய மாட்டார்

    ReplyDelete

Powered by Blogger.