போர் இன்னமும் முடியவில்லை, ஆயுதப் போராட்டமே முடிவுக்கு வந்துள்ளது - மாவை
நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகளாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள போதும் எம் தமிழ் மக்களின் உரிமைப் போர் இன்னும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வடமாகாண அரசாங்க நிர்மாண நிர்மாணிகள் சங்கத்தின் கூட்டம் காலை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கில் பல அபிவிருத்தித்திட்டங்கள்இ கட்டட நிர்மாணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக இங்கு ஏராளமான வங்கிகள் முதலீடுகளை செய்துள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில வங்கிகளை தவிர ஏனைய பெரும்பாலான வங்கிகள் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. மக்களுடைய முதலீடுகள் போன்ற தேவைகளை நிறைவு செய்வதுமில்லை.
மக்களின் பல தேவைகள் இன்னமும் தீர்க்கப்படாமலே உள்ளது. குறிப்பாக அரசியல் தீர்வு எமக்கு கிடைக்கவில்லை. பொருளாதார ரீதியான மாற்றங்களும் எம் மக்களிடத்தில் இருந்து எழவில்லை. இவ்வாறான மாற்றங்கள் நடைபெற வேண்டும்.
போர் இன்னமும் முடியவில்லை. ஆயுதப் போராட்டமே முடிவுக்கு வந்துள்ளது எனத் தெரிவித்தார்.
So let the military stay in North and east until the war finish 100%
ReplyDelete