Header Ads



புத்தளம் சாஹிரா கல்லூரி மாணவர்களின், அழகிய முன்மாதிரி

/Mohamed Muhsi/

கனமூலை முஸ்லிம் பாடசாலையின் பிரதி அதிபர் அஷ்ஷேய்க் என்.எம். உவைஸின் ( நளீமி) Money Purse புத்தளம் கொழும்பு முகத்திடலில் 30.08.2016 ல் மஃரிப் மற்றும் இஷாக்கிடையில் காணாமல் போயிருந்த நிலையில், அவ்வழியாக சென்று கொண்டிருந்த, அதனைக் கண்டெடுத்த புத்தளம் சாஹிரா கல்லூரியில் 11 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் ஸபர் மற்றும் இப்ராஸ் ஆகியோர் உரிய நபரை இனம் கண்டு கொண்டதோடு, அவ்விருவரும் எருக்கலம்பிட்டி நாகவில்லுக்கு பஸ்ஸில் சென்று, பிரதி அதிபர் உவைஸின் வீட்டைத் தேடி ஒப்படைத்தனர். 

12000 ஆயிரம் ரூபா பணம் உட்பட வங்கிக் கணக்கு அட்டைகள், வாகன, சாரதி அனுமதிப் பத்திரங்கள், ஆள்அடையாள, பாடசாலை அடையாள அட்டைகள் ஆகியன கிடைத்த மட்டற்ற மகிழ்ச்சி ஒரு புறமிருக்க, சாஹிரா கல்லூரி மாணவர்களின் இந்த உயர்ந்த குணத்தையும், அழகிய முன்மாதிரியையும் கண்டு அவரும், அவர் குடும்பமும் திகைத்துப் போனதுடன் ஆனந்த கண்ணீர் விட்டனர். அம்மாணவர்களுக்காக உளப்பூர்வமாக பிரார்த்தித்தனர்.

ما شاء الله. الحمد لله. بارك الله فيهم.

1 comment:

  1. இதற்கு பாடசாலையைவிட பெற்றோரின் ஒழுங்கான வளர்ப்புத்தான் கூடிய பங்களிப்பைச் செய்திருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.