Header Ads



ஸ்ரீலங்கன் எயார்லைன் விமானத்தில் வந்த, இரத்தினக் கற்கள் திருடப்பட்டது

பீஜிங்கில் இருந்து இலங்கை வந்திறங்கிய ஸ்ரீ லங்கன் எயார்லைன் விமானத்தில் இருந்த ஒரு பெட்டி இரத்தினக் கற்கள் திருடப்பட்டுள்ளது.

குறித்த இரத்தினக்கல் பெட்டியானது இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரிடம் இருந்தே திருடப்பட்டுள்ளது.

இந்த இரத்தினக்கற்களின் பெறுமதி ரூபா 2.6 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா விமான நிலையத்தில் இருந்து இன்று -04- அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு காலை 5.30 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை விமானம் வந்தடைந்துள்ளது.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில்தான் இரத்தினக்கற்கள் திருடப்பட்டுள்ளது.

திருட்டு சம்பவம் தொடர்பில் வர்த்தகர் விமான அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார் இருப்பினும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.

பின்னர் குறித்த வர்த்தகர் விமான நிலையத்தில் இறங்கியதும் உடனடியாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வர்த்தகர் இரத்தினகற்களை ஆகஸ்ட் 03 ஆம் திகதி சீனாவில் கொள்வனவு செய்துள்ளார் என்ற சான்றிதழ்களையும் அமைச்சகத்தில் வழங்கியுள்ளார்.

மேலும், அந்த பெட்டியில் அவரது பணப்பையை வைத்திருந்ததாகவும் அதில் ரூபா 740 அமெரிக்க டொலர்கள் மற்றும் ரூபா 10,000 சீனா யுவான் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, இரத்தினக்கற்கள் தொடர்பில் விபரம் தெரிந்தால் கட்டுநாயக்க பொலிஸாரிடம் தெரியப்படுத்துமாறு வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.