3 பெற்றோர் கொண்ட, முதல் குழந்தை இதுதான்..!!!
மூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவான முதல் குழந்தை மெக்சிகோவில் பிறந்துள்ளது. இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் பிறந்த ஐந்து மாத ஆண் குழந்தைக்கு, அதன் தாய் மற்றும் தந்தையிடமிருந்து கிடைக்கும் வழக்கமான மரபணுவைத் தவிர, கூடுதலாக கொடையாளியிடமிருந்த சிறிய ஒரு மரபணுக் குறியீடும் கிடைத்துள்ளது.
அந்தக் குழந்தையின் ஜோர்தானியத் தாயின் மரபணுவில் இருக்கும் ஒரு பிரச்சினை குழந்தைக்கு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த முன்னெப்போதும் செய்திராத நடவடிக்கையை அமெரிக்க மருத்துவர்கள் எடுத்தனர்.
இந்த சிகிச்சை முறை மருத்துவத்தில் புதியதொரு சகாப்தத்தை உருவாவதைக் காட்டுகிறது என்றும், இதே போன்று அபுூர்வ மரபணு பிரச்சினைகள் கொண்ட குடும்பங்களுக்கு இது உதவும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த முயற்சியில் அமெரிக்க மருத்துவ குழு ஈடுபட்டுள்ளது.் மெக்சிகோவில் இது போன்ற குழந்தை பெற தடை சட்டம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூவரின் மரபணுவைக் கொண்ட குழந்தை உருவாக்கப்படுவது இது முதல்முறையல்ல. 1990களிலேயே இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டபோதும் முற்றாக புதிய தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படுவது இது முதல் முறையாகும்.
It's not an advancement. On the contrary,it's a degradation of humankind.
ReplyDelete