Header Ads



மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி, செய்த காரியம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதியொருவர் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த நிலையில் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டே தனது முகவரான இன்னொரு பெண்ணின் மூலம் போதைப் பொருள் வர்த்தகத்தைத் தொடர்ந்துள்ளார்.

அதற்காக குறித்த பெண்ணுக்கு பொரலஸ்கமுவை பிரதேசத்தில் 25 ஆயிரம் ரூபா வாடகையில் வீடு ஒன்றையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் கல்கிஸ்ஸை படோவிற்றை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.