"முஸ்லிம் மாணவர்களை காலில் வீழ்ந்து, வணங்குமாறு வற்புறுத்த எவருக்கும் உரிமையில்லை"
வத்தளை, ராகுல வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவனை வகுப்பாசிரியருக்கு கெளரவம் செய்யும் முகமாக அவரது காலில் விழுந்து வணங்க கட்டாயப்படுத்தியமையானது இலங்கை அரசியலமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனம் உள்ளிட்டவற்றுக்கு எதிரானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தீர்ப்பளித்துள்ளது.
தனது பிள்ளையை வகுப்பாசிரியரும் பாடசாலையின் தேரர் ஒருவரும் காலில் விழுந்து வணங்க கட்டாயப்படுத்துவதாக வத்தளை அக்பர் டவுன் பகுதியைச் சேர்ந்த எம்.ஆர்.எம். சஜானி இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த போதே ஆணைக் குழு மேற்படி தீர்ப்பை அறிவித்துள்ளது.
முறைப்பாட்டில் ராகுல வித்தியாலயத்தின் அதிபர், ஆரம்ப பிரிவின் அதிபர் மற்றும் வகுப்பாசிரியை டப்ளியூ.பி.என்.ஜி. விதான பத்திரண ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இனி மேல் குறித்த பிள்ளையை ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கக் கட்டாயப்படுத்துவதில்லை, அவரது மத, கலாசார அனுஷ்டானங்களை தொடர தடை விதிப்பதில்லை உள்ளிட்ட உறுதிகளை வகுப்பாசிரியர் ஆணைக் குழுவில் வழங்கியுள்ள நிலையில் இந்த முறைப்பாடு மீதான விசாரணைகள் சுமுகமாக நிறைவு பெற்றுள்ளன.
இந் நிலையிலேயே இனிமேல் இவ்வாறான மத உரிமைகளை மீறும் நடவடிக்கைகள் எந்த பாடசாலைகளிலும் நடை பெறாத வண்ணம் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை தெளிவுபடுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பரிந்துரை செய்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் என்.டி.உடுகம இதற்கான பரிந்துரையை கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
எச்.ஆர்.சி./735/16 என்னும் இலக்கத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டில், தனது பிள்ளையை வகுப்பாசிரியர் காலில் விழுந்து வணங்க கட்டாயப்படுத்துவதாகவும் தாம் பின் பற்றும் இஸ்லாம் மதத்தின் பிரகாரம் இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்க முடியாது என்பதால் ஆசிரியையின் கட்டாயப்படுத்தலானது தமது மத உரிமையை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, இஸ்லாம் மதத்தின் பிரகாரம் ஒருவரை கெளரவப்படுத்துவதற்காக அவரை இன்னொருவர் வணங்க முடியாது எனவும் வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்பது மதத்தின் அடிப்படை அம்சம் என்பதையும் உறுதிச் செய்துள்ளது.
அதன்படி இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் தொடர்பிலான பிரிவின் 10 ஆவது அத்தியாயத்தில் ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்த மதத்தை பின்பற்ற அல்லது விசுவாசம் கொள்ள பூரண உரிமை உடையவன் என்பதை சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு,
தனது மதம் கலாசாரம் உள்ளிட்டவற்றை பகிரங்கமாக பின்பற்ற ஒவ்வொருவருக்கும் உரிமை, சுதந்திரம் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டுகின்றது.
அதன்படி, முறைப்பாட்டாளர் தெரிவித்ததைப் போன்று அவரது மத உரிமை மீறப்பட்டால் அவருக்கு அந்த உரிமை வழங்கப்படல் வேண்டும் என குறிப்பிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு பொறுப்புக் கூறத்தக்கவர்களிடமும் சம்பவம் குறித்து விசாரணை செய்துள்ளது.
அதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள குறித்த வகுப்பாசிரியை, தான் குறித்த பிள்ளைக்கு ஒரு போதும் தன்னை வணங்க கட்டாயப்படுத்தவில்லை எனவும், இதன் பிறகும் எந்த கட்டாயப்படுத்தல்களையும் செய்யப் போவதில்லை எனவும் உறுதியளித்துள்ளார்.
இந் நிலையில் ஒருவரின் மத கலாசார உரிமைகளை மீறும் வண்ணம் பாடசாலையில் கெளரவப் படுத்தும் நடவடிக்கைகள் அமைய முடியாது எனவும் அவ்வாறான முறையில் கட்டளைகளை பிறப்பித்து கட்டாயப்படுத்த இலங்கையின் கல்வித் துறைக்கு சட்டத்தில் இடமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு இரு தரப்பின் சுமுகமான நிலைப்பாட்டையடுத்து விசாரணையை நிறைவு செய்துள்ளது.
இந் நிலையிலேயே இவ்வாறான சம்பவங்கள் பதிவாவதை தடுக்கும் விதமாக அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை தெளிவுபடுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இன்னும் நம் சமுதாயம் திருந்தவில்லை எத்தனையோ முஸ்லிம் பாடசாலைகள் இருக்கும் போது ஏன் சிங்கள பாடசாலைகளில் சேர்க்க வேண்டும் நாமே நம் தலையில் மண்ணை அள்ளி வைப்பது போன்ற வேலையை செய்கிறோம் இவ்வாறு அன்னிய பாடசாலையில் படித்து தம் கலாச்சாரத்தை இழந்வர்கள்தான் பிற்காலத்தில் முஸம்மில் போன்றவர்களைப்போல் இஸ்லாத்துக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராக கருத்து சொல்வதும் பெரும்பான்மைக்கு ஆதரவாக இருப்பதும் இதுவே காரணம் .அடுத்து இப்பாடசாலையில் காலில் விழுவது,மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது,இம்மாணவர்கள் 10.13வருடம் அந்நிய மத கலாச்சாரம் நிறைந்த பாடசாலையில் சக மாணவர்களுடன் இரண்டறக்கலந்து படிக்கும் போது இவர்களிடம் ஈமானின் துளி கூட மீதம் இருக்குமா ஏன் இந்த பெற்றார் சிந்திக்க மாட்டார்களா?தன் பிள்ளையை தானே வழி கேட்டுக் கான பாதையில் கொண்டு செல்வது கேவலமானதும் வருந்தத்தக்கதும்
ReplyDeleteஇன்னும் நம் சமுதாயம் திருந்தவில்லை எத்தனையோ முஸ்லிம் பாடசாலைகள் இருக்கும் போது ஏன் சிங்கள பாடசாலைகளில் சேர்க்க வேண்டும் நாமே நம் தலையில் மண்ணை அள்ளி வைப்பது போன்ற வேலையை செய்கிறோம் இவ்வாறு அன்னிய பாடசாலையில் படித்து தம் கலாச்சாரத்தை இழந்வர்கள்தான் பிற்காலத்தில் முஸம்மில் போன்றவர்களைப்போல் இஸ்லாத்துக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராக கருத்து சொல்வதும் பெரும்பான்மைக்கு ஆதரவாக இருப்பதும் இதுவே காரணம் .அடுத்து இப்பாடசாலையில் காலில் விழுவது,மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது,இம்மாணவர்கள் 10.13வருடம் அந்நிய மத கலாச்சாரம் நிறைந்த பாடசாலையில் சக மாணவர்களுடன் இரண்டறக்கலந்து படிக்கும் போது இவர்களிடம் ஈமானின் துளி கூட மீதம் இருக்குமா ஏன் இந்த பெற்றார் சிந்திக்க மாட்டார்களா?தன் பிள்ளையை தானே வழி கேட்டுக் கான பாதையில் கொண்டு செல்வது கேவலமானதும் வருந்தத்தக்கதும்
ReplyDeleteEdu pool enum adiham nadakinrad.
ReplyDeleteமேற்படி கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளமுடியாது.குறிப்பாக ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சிங்கள மொழியில் கல்வி கற்ற வேண்டும் எனதீர்மானித்தால் அதற்குத்தடையாக எவரும் இருக்க முடியாது. இஸ்லாத்தை ஏனையவர்களுக்கும் குறிப்பாக பெரும்பான்மையினருக்கு எடுத்து வைக்க முற்பட்டால் அதற்கு சிங்கள மொழியைத்திறமையாக கற்றுத்தேற வேண்டும். அத்தகைய உன்னதநோக்கம் இருந்தால் சிங்கள மொழியைக் கற்க சமூகம் அவர்ளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
ReplyDeleteMustafa jafer உங்கள் கருத்து முற்றிலும் உண்மை இவ்வுலகத்துற்கு கொடுக்கும் முக்கியத்தும் மறுமைக்கு இந்த சமூகம் ஏன் கொடுப்பதில்லை
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் முஸ்தபா.
ReplyDelete
ReplyDeleteயார் ஒரு கூட்டத்திட்கு ஒப்பாக நடக்கின்றாறோ அவர் அந்த கூட்டத்தை சேர்ந்தவராவார் என நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு (ஆதாரம்: அபூதாவுத், அஹ்மத்)
இன்னும் மனிதர்களில் 'நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்' என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (2:8)
It is welcome that the teacher promised not to order to prostrate for her. The teacher needs to understand that this is not the way to discipline or respect. This student will remember this forever & will retaliate one-time. The solution is not, not sending them to Singhalese schools. Muslims students must speak better Singhala than Singhalese. It is not respectable dragging an individual's name here unnecessarily.
ReplyDeleteDr Sir ,
ReplyDeleteThere is only very limited Muslim schools which is insufficient to accommodate all the children.
Our political leaders are blindfolded as usual.