"சோமாலியா தற்கொலை, தாக்குதலை நடத்தியவன் முன்னாள் எம்.பி.
சோமாலியத் தலைநகர் மொகடிஷு விமான நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் அந்த நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்தது.
இதுகுறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
ஹாலேன் ராணுவ மையத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட இரு தாக்குதல்களில் ஒன்று, சலா பாத்படோ என்று அறியப்படும் சலா நூ இஸ்மாயிலால் நிகழ்த்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், அந்த மதத் துரோகத்தை 2010-ஆம் ஆண்டு பகிங்கரமாகக் கைவிட்டார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோமாலிய நாடாளுமன்ற உறுப்பினராக 2004 முதல் 2010-ஆம் ஆண்டு வரை சலா பாத்படோ பதவி வகித்தார்.
Post a Comment