Header Ads



"சோமாலியா தற்கொலை, தாக்குதலை நடத்தியவன் முன்னாள் எம்.பி.

சோமாலியத் தலைநகர் மொகடிஷு விமான நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் அந்த நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

ஹாலேன் ராணுவ மையத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட இரு தாக்குதல்களில் ஒன்று, சலா பாத்படோ என்று அறியப்படும் சலா நூ இஸ்மாயிலால் நிகழ்த்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், அந்த மதத் துரோகத்தை 2010-ஆம் ஆண்டு பகிங்கரமாகக் கைவிட்டார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோமாலிய நாடாளுமன்ற உறுப்பினராக 2004 முதல் 2010-ஆம் ஆண்டு வரை சலா பாத்படோ பதவி வகித்தார்.

மொகடிஷு விமான நிலையத்தையொட்டிய ஆப்பிரிக்க யூனியன் படை மையத்துக்கு அருகிலும், ஐ.நா. அலுவலகக் கட்டடத்துக்கு அருகிலும் வெடிபொருள் நிரப்பிய வாகனங்களில் இரு அல்-ஷபாப் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

No comments

Powered by Blogger.