நரேந்திர மோடி, என்னை கொலை செய்யலாம் - அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால், ஒருபடி மேலே சென்று, என்னை கொலை கூட செய்யலாம் என அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். பஞ்சாப், குஜராத் மற்றும் கோவாவில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதால் பிரதமர் மோடி அவர்கள் மிகுந்த விரக்தியில் இருப்பதாகவும், வருமான வரித்துறையினர் முலம் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை நடத்தியுள்ளதாகவும், மேலும் 21 பேரை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
Post a Comment