Header Ads



ஜம்­இய்­யத்துல் உலமா ஜனாதிபதிக்கு, அனுப்பிவைத்துள்ள அவசர கடிதம்


'முஸ்­லிம்கள் தமது உயி­ரிலும் மேலாகக் கருதும் அல்­லாஹ்­வையும் இறை­தூதர் முஹம்­மது நபி­யையும் ஞான­சார தேரர் அவ­ம­தித்துப் பேசி­யுள்­ள­மையை முஸ்­லிம்­களால் சகித்­துக்­கொள்ள முடி­யாது.

எந்­த­வொரு முஸ்­லிமாலும் இதனை அனு­ம­திக்க முடி­யாது. நீதியின் முன் அனை­வரும் சமம் என்ற அடிப்­ப­டையில் முஸ்­லிம்கள் இவ்­வி­ட­யத்தில் நியா­ய­மான தீர்­வொன்­றினை எதிர்­பார்க்­கி­றார்கள்' என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. 

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் ­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாரக் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­திலேயே இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

அக்­க­டி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

'கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் மஹி­யங்­க­னையில் ஆற்­றிய பகி­ரங்க உரையை அனை­வரும் அறி­வார்கள். அந்த உரை முஸ்­லிம்­களை மிகவும் புண்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்தச் சம்­பவம் முஸ்லிம்  அமைப்­பு­க­ளினால் பொலிஸ்மா அதி­ப­ருக்கு முறை­யி­டப்­பட்­டது.

இத­னை­ய­டுத்தே தேரர் முஸ்­லிம்கள் தமது உயி­ரிலும் மேலாகக் கருதும் அல்­லாஹ்­வையும் இறை­தூதர் முகம்­மது நபி­யையும் அவ­ம­தித்துப் பேசி­யுள்ளார். கருத்து வெளி­யிட்­டுள்ளார். இதனை எந்­த­வொரு முஸ்­லிமும் சகிக்­க­மாட்டார். ஞான­சார தேரர் பேசி­யுள்­ளதை எந்­த­வொரு சமய நம்­பிக்­கை­யுள்­ள­வரும் அனு­ம­திக்­க­மாட்­டார்கள். 

ஞான­சார தேரர் மஹி­யங்­க­னையில் ஆற்­றிய உரையில் மீண்டும் அளுத்­க­மை போன்­றதோர் சம்­பவம் தேவையா என்று கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். இதுவும் முஸ்­லிம்­களின் மனதைப் புண்­ப­டுத்­தி­யுள்­ளது.  

அவர் முஸ்­லிம்­க­ளையும் பொலி­ஸா­ரையும் எச்­ச­ரிக்கும் பாணியில் பேசி­யுள்ளார். இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் பற்றி வெறுப்­பு­ணர்வு ஏற்­படும் வகை­யி­லான அவ­ரது உரையை நாம் கண்­டிக்­கிறோம். 

அளுத்­கம சம்­ப­வத்­துக்கு யார் பொறுப்­பு­தாரி என்­பது கடந்த காலங்­களில் அறிய முடி­யா­தி­ருந்­தது. தற்­போது ஞான­சார தேரர்தான் அளுத்­கம சம்­ப­வத்­துக்கு முழு­மை­யான பொறுப்­பு­தாரி என நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.  'போய் அல்­லாஹ்­விடம் முறை­யி­டுங்கள்' என்று கூறு­வ­தற்கு அவ­ருக்கு எந்த உரி­மையும் இல்லை என்­பதை நீங்கள் ஏற்­றுக்­கொள்­வீர்கள் என்று நம்­பு­கிறோம். 

அளுத்­கம சம்­ப­வத்­துக்கு சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­மையே அவரை இவ்­வா­றான பேச்­சுக்கு உற்­சாக மூட்­டி­யுள்­ளது என நாம் நினைக்­கிறோம். அதனால் சட்­டத்தின் முன் அனை­வரும் சமம் என்ற வகையில் முஸ்­லிம்கள் இவ்­வி­வ­கா­ரத்­துக்கு நியா­ய­மான தீர்­வினை எதிர்­பார்­க்கி­றார்கள். 

அர­சாங்கம் எவ­ருக்கும் தேவை­யற்ற ஆபத்­தான நிலை­மை­களை உரு­வாக்க இட­ம­ளிக்க வேண்­டா­மென வேண்டிக் கொள்­கிறோம். 
சாந்­தியும் சமா­தா­னமும் மிக்க நாட்­டுக்­காக அல்­லாஹ்வைப் பிரார்த்­திக்­கிறோம் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

2 comments:

  1. Yahapalanaya jokers are not less than MR.

    ReplyDelete
  2. I was telling the same thing. The election was supported by the same people who supported David Cameron. The Zionists.
    So they come in sheeps skin. They are actually foxes.
    We can't expect MR or MY3 to do Anything better for us. We Muslims should unite. Control our feelings, think wisely. Shouldn't get carried away.
    The enemies of Islam will do everything to provoke and distable our economy. That's why every tin something happens they targets Muslim owned businesses.

    ReplyDelete

Powered by Blogger.