மஹிந்தானந்த Mp வீட்டில், கொலை வாகனம் - அவரது தம்பியும், ரஞ்சனும் அம்பலப்படுத்தினர்
கொலை உள்ளிட்ட பல்வேறு மோசடிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலுள்ளதாக, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் வௌிப்படுத்தியுள்ளனர்.
இன்று ஊடகவியலாளர்கள் குழுவினருடன் அப் பகுதிக்கு சென்ற அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த வாகனம் கடந்த ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் வசம் இருந்ததாகவும், அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எனவும் ரஞ்சன் ராமநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.
மேலும், அச் சந்தர்ப்பத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரி ஒருவருக்கு அழைப்பை மேற்கொண்ட அவர், ஜீ.ஈ 2034 என்ற இலக்கத் தகடுள்ள வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என, வினவினார்.
அதற்கு குறித்த அதிகாரி இல்லை என பதிலளித்தார்.
இதனையடுத்து, கருத்து வௌியிட்ட ஆனந்த அளுத்கமகே இந்த வாகனம் கொலை, கடத்தல், ஊழல் மோசடி போன்ற பல விடயங்களுடன் தொடர்புபட்டதாகவும், இது குறித்து நாவலபிடிய மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தால் குறித்த இலக்கத் தகடு கொண்ட வாகனத்தை தேடும் படி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர்கள் மூன்று, நான்கு கோடிகளுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வது பற்றி பேசுகையில் இதுபோன்றதொரு வாகனம் ஒரே இடத்தில் தரித்து வைக்கப்பட்டிருப்பதற்கு பதிலான அதன் மூலம் பயனைப் பெற வேண்டும் எனவும் ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டினார்.
இன்று ஊடகவியலாளர்கள் குழுவினருடன் அப் பகுதிக்கு சென்ற அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த வாகனம் கடந்த ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் வசம் இருந்ததாகவும், அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எனவும் ரஞ்சன் ராமநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.
மேலும், அச் சந்தர்ப்பத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரி ஒருவருக்கு அழைப்பை மேற்கொண்ட அவர், ஜீ.ஈ 2034 என்ற இலக்கத் தகடுள்ள வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என, வினவினார்.
அதற்கு குறித்த அதிகாரி இல்லை என பதிலளித்தார்.
இதனையடுத்து, கருத்து வௌியிட்ட ஆனந்த அளுத்கமகே இந்த வாகனம் கொலை, கடத்தல், ஊழல் மோசடி போன்ற பல விடயங்களுடன் தொடர்புபட்டதாகவும், இது குறித்து நாவலபிடிய மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தால் குறித்த இலக்கத் தகடு கொண்ட வாகனத்தை தேடும் படி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர்கள் மூன்று, நான்கு கோடிகளுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வது பற்றி பேசுகையில் இதுபோன்றதொரு வாகனம் ஒரே இடத்தில் தரித்து வைக்கப்பட்டிருப்பதற்கு பதிலான அதன் மூலம் பயனைப் பெற வேண்டும் எனவும் ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டினார்.
மஹிந்தானந்த அளுத்கமகேயின் சொந்த சகோதரரே ஆனந்த அளுத்கமகே என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment