வகுப்பறையில் கற்று கொண்டிருந்த, மாணவன் உயிரிழப்பு
புளத்சிங்கள பிரதேசத்தில் தனியார் வகுப்பொன்றில் கல்வி கற்று கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் மர்மமாக உயிரிழந்துள்ளான்.
யடகம்பிட்டிய பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.
நேற்று -27- மாலை 3 மணியளவில் குறித்த மாணவன் தனியார் வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவனுக்கு எவ்வித நோயும் இருக்கவில்லை என உறவினர்கள் கூறியுள்ளனர்.
மாணவனின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மாணவனின் சடலம் தற்போது நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்து.
Post a Comment