"என்ன நடக்க உள்ளது என்பதை, மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" - மகிந்த
புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட மாட்டாது, அவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டு எதிர்கட்சி இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை இன்று -23- பார்வையிட சென்ற போதே செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய இருப்பதை தாம் மறுப்பதாகவும் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் புதிய கட்சி உருவாக்கப்பட மாட்டாது, மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ன நடக்க உள்ளது என்பதை என்றும் மஹிந்த கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் பழிவாங்கல் எண்ணங்கள் காரணமாகவே கூட்டு எதிர்க்கட்சியின்உறுப்பினர்கள் கைது செய்யப்படுகின்றார்கள் என அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

REMEMBER WHAT YOU DID TO THE PRESIDENTIAL CANDIDATE SARATH
ReplyDeleteFONSEKA RIGHT IN FRONT OF OPPOSITION LEADERS in 2010 ? Now
your turn,enjoy the episode ! Losing excess weight is good
for your health to live longer Mr former Boss .
முன்பு என்ன நடந்தது என்பதையும் மக்கள் பார்த்தார்கள், அதனால் தான் நீங்கள் இன்று இப்படி ஆகிவிட்டீர்கள்!
ReplyDeleteஇவன் இப்படி சொல்வதின் அர்த்தம் இராணுவ புரட்சியொன்றாக இருக்குமோ ?
ReplyDeleteHi I Ekwa.. neengal solvathu sari endre ninaikkiren. Ivar thaan pasu thol porthiya puli aachche. Ivarin Sagothararitkum Janathipathi kanavu ullathu...
ReplyDelete