முஸ்லிம் காங்கிரஸ் தற்பொழுது பின்னடைவை எதிர்கொண்டுள்ளது - பசீர் சேகுதாவூத்
(வீரகேசரி)
நான் அரசியலிலிருந்து விலகியதாக எனது அறிக்கையை சிலர் மிகைப்படுத்திக் கூறுகின்றனர். ஆனால் அதுவல்ல உண்மை. எனது முடிவும் அதுவல்ல.
தேர்தலில், இறங்கி வாக்குக்கேட்கும் சாமானிய அரசியல்வாதியாக இல்லாமல் அரசியல், சமூக செயற்பாட்டாளராக விஸ்வரூபமெடுக்கும் முடிவே அது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்பொழுது பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.
கட்சியின் ஆரம்பகர்த்தாவான அஷ்ரப்பிற்கு இருந்த கட்சி மீதான பற்று தற்போதைய தலைமையிடமில்லை. அஷ்ரப் ஆரம்பகர்த்தா ஆனால் ஹக்கீமோ இணக்கத்தலைவர். அஷ்ரப் ஆலமரம் என்றால் ஹக்கீம் நாணல். அஷ்ரபுக்கிருந்த மக்கள் பிரக்ஞையும் ஸ்தாபனப் பற்றும் ஒப்பீட்டளவில் ஹக்கீமுக்குக் குறைவு. அஷ்ரப் தந்தையென்றால் ஹக்கீம் சிறிய தந்தை.
இவற்றையே இருவருக்குமிடையிலான வேறுபாடாக நான் இனங்காண்கின்றேன்.
அஷ்ரப் இக்கட்சியை ஸ்தாபித்ததால் இக்கட்சியை தன் சொந்தப் பிள்ளைபோல் பார்த்துக்கொண்டார். அக்கட்சிமேல் அவருக்கு இணையற்ற பாசமும் பற்றும் செயலூக்கமும் காணப்பட்டது.
அத்துடன் கட்சியின் பின்னடைவில் அவருக்கு மிகுந்த வேதனையும் கட்சியை சரிவிலிருந்து மீட்பதில் துரிதமாக செயற்படும் ஆற்றலும் அவரிடம் காணப்பட்டது. அந்தளவு ஆற்றல் இந்தத் தலைவரிடம் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

பஷீர் சேகு தாவுத் அவர்களே, சகோதரர் ஹக்கீம் அவர்கள் நாணல் அல்ல ஒட்டுண்ணி தாவரம் ( parasitic plant : மரங்கள் மீது படர்ந்து வளர்ந்து அவற்றின் சத்தினை உறிஞ்சும் ஒட்டுண்ணி வகை தாவரம். ஏனைய காங்கிரஸ் எம்பிமாரும் அவ்வாறுதான் ) நாணலாவது நிலத்தில் வளரும். நீங்கள் இப்படி ஒப்பீடுகள் செய்வதை விட அவரது தலைமைத்துவதினால் எடுக்கப்பட்ட முடிவுகள் ( ராஜா பக்ஸவுடன் சேர்ந்து கொண்டது, 18 வது திருத்த சட்டம், கசினோ சட்ட மூலம், தெவிநுமுகம சட்ட மூலம். ஸ், ஹலால் பிரச்சினை...Etc....) . தேர்தல் காலங்களிலும், நெருக்கடி காலங்களிலும் கைமாறுப்பட்ட பணங்கள், பதவிகள்... போன்ற இன்னோரன்ன விடயங்களும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். உண்மையான காங்கிரஸ் போராளிகளும் மக்களும் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.
ReplyDeleteபஷீர் சேகு தாவுத் அவர்களே, சகோதரர் ஹக்கீம் அவர்கள் நாணல் அல்ல ஒட்டுண்ணி தாவரம் ( parasitic plant : மரங்கள் மீது படர்ந்து வளர்ந்து அவற்றின் சத்தினை உறிஞ்சும் ஒட்டுண்ணி வகை தாவரம். ஏனைய காங்கிரஸ் எம்பிமாரும் அவ்வாறுதான் ) நாணலாவது நிலத்தில் வளரும். நீங்கள் இப்படி ஒப்பீடுகள் செய்வதை விட அவரது தலைமைத்துவதினால் எடுக்கப்பட்ட முடிவுகள் ( ராஜா பக்ஸவுடன் சேர்ந்து கொண்டது, 18 வது திருத்த சட்டம், கசினோ சட்ட மூலம், தெவிநுமுகம சட்ட மூலம். ஸ், ஹலால் பிரச்சினை...Etc....) . தேர்தல் காலங்களிலும், நெருக்கடி காலங்களிலும் கைமாறுப்பட்ட பணங்கள், பதவிகள்... போன்ற இன்னோரன்ன விடயங்களும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். உண்மையான காங்கிரஸ் போராளிகளும் மக்களும் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.
ReplyDeleteபாதிக்கப்பட்டவரின் உளக் குமுறல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
ReplyDeleteWhile Mulims are struggling to preserve their Identity these fools are fighting each other.what a unfortunate muslim society.
ReplyDelete