Header Ads



மஹிந்த ராஜபக்ச புதிய கட்சி, அமைக்கும் வரையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் - துமிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பத்து கட்சிகள் அமைத்தாலும் ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சிக்கு அது சவாலாக அமையாது என கட்சியின் பொதுச் செயலாளா துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

மஹிந்த ராஜபக்ச ஒரு கட்சி அல்ல அல்லது பத்து கட்சிகள் அமைத்தாலும் அது சுதந்திரக் கட்சிக்கு சவாலாகவோ அச்சுறுத்தலாகவோ அமையப் போவதில்லை.

கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சியை அழிப்பதனை விடவும், கட்சியை விட்டு விலகிச் சென்று தனிக் கட்சி அமைப்பது மேலானது.

அது தொடர்பில் நாம் எவ்வித தடையையும் ஏற்படுத்தப் போவதில்லை.

ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்சக்களை தோற்கடித்த நாள் முதல், மஹிந்தவும் அவரது உறவினர்களும் புதிய கட்சி அமைப்பது பற்றி பேசி வருகின்றனர்.

எனினும் இதுவரையில் புதிய கட்சி அமைக்கவில்லை.

மஹிந்த ராஜபக்ச புதிய கட்சி அமைக்கும் வரையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.