Header Ads



"மினாராவை எட்டிவிட்ட இனவாதம்"

-விடிவெள்ளி ARA.Fareel-

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மலை­நாட்டின் தலை­ந­கரில் சில இன­வாத பௌத்த அமைப்­புகள் ‘மினாரா’ நிர்­மா­ணத்­துக்கு எதி­ராக மேற்­கொண்ட எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் முஸ்­லிம்­களை அச்­ச­ம­டையச் செய்­துள்­ளது. கண்டி நகரில் அமைந்­துள்ள லைன் ஜும்ஆ பள்­ளி­வாசல் ‘மினாரா’ நிர்­மா­ணத்­துக்கு எதி­ரா­கவே இந்த ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆர்ப்­பாட்­டத்தை ‘சிங்­ஹலே’ அமைப்பு ஏற்­பாடு செய்­த­தாகக் கூறப்­பட்­டாலும் இதன் பின்­ன­ணியில் மேலும் பல சிங்­கள இன­வாத அமைப்­புகள் பங்­கு­கொண்­டுள்­ளன.

கண்டி லைன் பள்­ளி­வா­ச­லுக்­கான காணி அன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளினால் 1905 ஆம் ஆண்டு வழங்­கப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கி­றது. பிரித்­தா­னிய ஆட்­சி­யா­ளர்­களால் இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்ட ‘மலே’ ஊழி­யர்­க­ளுக்கு தமது சமயக் கட­மை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இவ்­வி­டத்தில் சிறிய பள்­ளி­வா­ச­லொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. இப்­பள்­ளி­வா­சலை 1980 ஆம் ஆண்டில் புதி­தாக நிர்­மா­ணிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அதற்­கான சட்ட ரீதி­யான அனு­மதி கண்டி மாந­கர சபை­யி­ட­மி­ருந்து பெற்றுக் கொள்­ளப்­பட்­டது. 1980 இல் ஆரம்­பிக்­கப்­பட்ட நிர்­மாணப் பணிகள் 2000 ஆண்­டிலே பூர்த்தி செய்­யப்­பட்டு திறந்து வைக்­கப்­பட்­டது. நிதி வசூ­லிப்புக்கேற்ப கட்டம் கட்­ட­மா­கவே இந்த நிர்­மாணப் பணிகள்  மேற்­கொள்­ளப்­பட்­ட­த­னா­லேயே பள்­ளி­வா­சலைப் பூர்த்தி செய்ய 20 வரு­டங்கள் தேவைப்­பட்­டன.

1980 ஆம் ஆண்டு நிர்­மாணப் பணிகள்  முன்­னெ­டுக்­கப்­பட்ட போது தற்­போது சர்ச்­சைக்­கு­ரி­ய­தா­கி­யுள்ள ‘மினாரா’ கட்­டிட நிர்­மாண வரை படத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. மினா­ரா­வுக்­காக தனி­யான கட்­டிட வரை படமே மாந­கர சபை­யிடம் அனு­ம­திக்­காக வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

கண்டி லைன் பள்­ளி­வாசல் நிர்­வாகம் நீண்­ட­கா­ல­மாக ஆரம்­பிக்­கப்­ப­டா­தி­ருந்த ‘மினாரா’ நிர்­மாண வேலை­களை அண்­மையில்  ஆரம்­பித்­த­தை­ய­டுத்தே இதற்கு எதி­ரான ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. கண்டி ஸ்ரீத­லதா மாளி­கையை விடவும் லைன் பள்­ளி­வா­சலின் மினாரா (கோபுரம்) உய­ர­மாக அமை­யப்­போ­கி­றது. இதற்கு ஒரு­போதும் அனு­ம­தி­ய­ளிக்க முடி­யாது என்று எதிர்ப்புத் தெரி­வித்தே ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 9 மணிக்கு ஆரம்­ப­மான இவ் ஆர்ப்­பாட்­டத்தை அரம்­பெ­பொல ரத்­ன­சார தேரர் முன்­னெ­டுத்தார். ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் உள்ள வீதியில் அமர்ந்­தி­ருந்து பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ரான கோஷங்­களை எழுப்­பினர்.

இதனால் கண்டி நகரில் பதற்ற நிலை­யொன்று உரு­வா­கி­யது. போக்­கு­வ­ரத்­தையும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் தடை செய்­தனர். ஆர்ப்­பாட்­டத்தை கலைப்­ப­தற்கு பொலிஸார் முயற்­சித்­த­போதும் அது கைகூ­ட­வில்லை. மினாரா நிர்­மாணப் பணி­களை நிறுத்­து­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட அரச அதி­கா­ரிகள் உத்­த­ர­வா­த­ம­ளித்­தாலே அமை­தி­யாக முடி­யு­மெ­னவும் அவர்கள் தெரி­வித்­தனர். ஸ்தலத்­துக்கு வருகை தந்த கண்டி மாந­கர சபை அதி­கா­ரிகள் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­து­டனும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தைகள் நடத்தி சுமு­க­மாகத் தீர்த்து வைப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டனர்.

குறிப்­பிட்ட நிர்­மாணம் தொடர்­பாக ஆராய்ந்து இறுதித் தீர்­மாணம் மேற்­கொள்ளும் வரை நிர்­மாணப் பணி­களை மறு அறி­வித்தல் வரை நிறுத்திக் கொள்­வ­தாக  அதி­கா­ரிகள் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திடம் கடி­த­மொன்­றினைப் பெற்றுக் கொண்­டனர். அந்தக் கடிதம் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளிடம் காண்­பிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்தே அங்­கி­ருந்து கலைந்து சென்­றனர்.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கலைந்து சென்­ற­த­னை­ய­டுத்து முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்த மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டினர்.  அமைச்­ச­ருடன் கண்டி மாந­கர சபை உறுப்­பினர் இலாஹி ஆப்தீன், பள்­ளி­வாசல் தலைவர் அப்சால் மரிக்கார் ஆகி­யோரும் சென்­றி­ருந்­தனர்.

அமைச்சர் ஹலீம் மகா­நா­யக்க தேரர்­க­ளிடம் பள்­ளி­வாசல் கட்­டிட நிர்­மாண வரை­ப­டத்­தையும் காண்­பித்தார். பள்­ளி­வா­சலில் பாரிய கோபுரம் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வில்லை. சிறி­யவோர் மினா­ராவே கட்­டப்­ப­டு­கி­றது. பள்­ளி­வாசல் தலதா மாளி­கை­யி­லி­ருந்தும் மிகவும் தாழ்­நிலப் பிர­தே­சத்­திலே அமைந்­துள்­ளது என்­பதை எடுத்து விளக்­கினார். பள்­ளி­வா­சலை அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்கு மினாரா அவ­சியம் அமைக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் கூறினார்.

ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­த­வர்கள் தவ­றாகப் புரிந்து கொண்­டுள்­ளார்கள். கண்­டியில் லைன் பள்­ளி­வா­சலுக் அருகில் அமைந்­துள்ள சிட்டி சென்­டரை விடவும் 15 அடிகள் குறை­வா­கவே மினாரா அமையும் என்­ப­தையும் உறுதி செய்தார்.

மகா­நா­யக்க தேரர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தையில் கலந்து கொண்­டி­ருந்த தேரர்கள் முஸ்­லிம்கள் பௌத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் சில­வற்றை அமைச்­ச­ரிடம் எடுத்து விளக்­கி­னார்கள். முஸ்­லிம்­களின் செயற்­பா­டுகள் பெரும்­பான்மைச் சமூ­கத்தைப் பெரிதும் பாதிப்­ப­டையச் செய்­துள்­ள­தாகக் கூறி­னார்கள். சில வாரங்­க­ளுக்கு முன்பு மஹி­யங்­க­னையில் பங்­க­ர­கம்­மன முஸ்லிம் கிரா­மத்தைச் சேர்ந்த இளை­ஞர்கள் எட்டுப் பேர் வெசாக் தினத்­தன்று பௌத்த கொடியை எரித்து பௌத்­தர்­களைப் புண்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். மட­வளை பாட­சா­லையில் எமது இனத்­த­வ­ருக்கு மரண அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருக்­கி­றார்கள். இவை இன நல்­லி­ணக்­கத்­துக்குப் பாத­க­மா­னவை என்று தெரி­வித்­தார்கள்.

ஒரு இனத்தின் கொடியை தீயிட்டு எரிப்­பது அதுவும் அவர்­க­ளது வெசாக் தினத்­தன்று கண்­டிக்­கத்­தக்­க­தாகும். முஸ்­லிம்­களின் இவ்­வா­றான செயற்­பாடு நிச்­சயம் பெரும்­பான்மை சமூ­கத்­துக்கும் எமக்கும் இடையில் முறுகல் நிலை­யினை உரு­வாக்கும். நாம் பெரும்­பான்மைச் சமூ­கத்­துக்கு எதி­ராக விரல் நீட்­டு­வ­தற்கு முன்பு எமது தவ­றான செயற்­பா­டு­க­ளையும் நிறுத்­திக்­கொள்ள வேண்டும். அப்­போது எமக்கு இடையே நல்­லு­ற­வு­களை வளர்க்க முடியும்.

அமைச்சர் ஹலீம் புனித ரம­ழானில் பெரும்­பான்மை சமூ­கத்­துடன் முரண்­பா­டு­களை வளர்த்­துக்­கொள்ள விரும்­ப­வில்லை. அதனால் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை மினாரா நிர்­மாணப் பணி­களை தற்­கா­லி­க­மாக நிறுத்­திக்­கொள்ள உடன்­பட்­டுள்­ளது.

மினாரா நிர்­மாணம் தொடர்பில் கண்டி நகர பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னமும் கருத்து தெரி­வித்­துள்­ளது. மினாரா நிர்­மா­ணத்­திற்­கான சட்ட ரீதி­யான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொண்டே வேலைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன என நிர்­வாகம் தெரி­வித்­துள்ள நிலையில், பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் உண்­மையைத் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது.

கண்டி நகர பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் உறுப்­பினர் ஒருவர் அளித்­துள்ள விளக்கம் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். தற்­போ­துள்ள பள்­ளி­வா­சலின் புதிய கட்­டடம் 2000 ஆண்­டிலே திறந்­து­வைக்­கப்­பட்­டது. கண்டி மாந­கர சபை­யிடம் மினாரா நிர்­மா­ணத்­திற்­காக தனி­யாக வரை­ப­டத்­துடன் அனு­மதி கோரப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அனு­மதி கால­தா­ம­த­மா­கி­யது. என்­றாலும் முன்னாள் கண்­டி­மே­யரே கண்டி நகர் அபி­வி­ருத்தித் திட்­டத்­தினை முன்­னெ­டுத்து வந்தார்.

மாந­கர சபையின் அனு­மதி கிடைக்கப் பெற்­றி­ரா­வி­டினும் அவர் வாய் மொழி மூலம் எமக்கு அனு­மதி வழங்­கி­யி­ருந்தார். ஒரு தடவை பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம் செய்த முன்னாள் மேயர் பள்­ளி­வா­சலைப் பார்­வை­யிட்டு நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த மினாரா நிர்­மாண வேலை­களை ஆரம்­பித்து அதனைப் பூர்த்தி செய்து கொள்­ளு­மாறும் அப்­போது பள்­ளி­வாசல் அழ­காக இருக்­கு­மெ­னவும் தெரி­வித்தார். அதற்­கி­ணங்­கவே மினாரா வேலை ஆரம்­பிக்­கப்­பட்­டது என்று தெரி­வித்­துள்ளார். எனவே நிர்­மாணப் பணிகள் சட்­ட­ரீ­தி­யான அனு­மதி பெற்றுக் கொள்­ளப்­ப­டா­மலே ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளமை கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

பள்­ளி­வாசல் நிர்­வாகம் சட்ட ரீதி­யான அனு­ம­தியைப் பெற்றுக் கொண்டே நிர்­மாண வேலை­களை ஆரம்­பித்­தி­ருக்க வேண்டும். அவ்­வாறு ஆரம்­பித்­தி­ருந்தால் எவ­ராலும் மினாரா அமைப்­பதை தடை­செய்­தி­ருக்க முடி­யாது. ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டி­ருக்க முடியும். கோபுரம் (மினாரா) அமைக்கும் திட்­டத்தை முற்­றாக கைவிட்டு விட­வில்லை. தற்­போது திட்­ட­மி­டப்­பட்­டுள்ள உய­ரத்­திலும் குறை­வாக மினா­ராவை அமைப்போம் என நகர பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் திட­மாக உறு­தி­யாக இருப்­பது வர­வேற்­கத்­தக்­க­தாகும். நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை மற்றும் கண்டி மாந­கர சபையின் ஒத்­து­ழைப்பு இதற்கு பெற்றுக் கொள்­ளப்­படும் எனவும் சம்­மே­ள­னத்தின் நிர்­வாகி தெரி­வித்­துள்ளார்.

இவ்­வா­றான இலக்கை நோக்கிப் பய­ணிக்கும் தமது பய­ணத்தில் உறு­தி­யாக இருக்கும் நிர்­வா­கி­களே இக்­கா­ல­கட்­டத்தில் பள்­ளி­வா­சல்­க­ளுக்குத் தேவைப்­ப­டு­கி­றார்கள். வக்பு சபை இது­வி­ட­யத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

முன்னாள் கண்டி மேயர் மகேந்­திர ரத்­வத்த
கண்டி நகரின் முன்னாள் மேயர் மகேந்­திர ரத்­வத்த பள்­ளி­வாசல் ‘மினாரா’ நிர்­மா­ணத்­துக்கு தனது காலத்­திலும் தனது பத­விக்­கா­லத்­துக்குப் பின்­னரும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதை உறு­தி­செய்­தி­ருக்­கிறார். கண்டி நக­ரி­லுள்ள தலதா மாளிகை உலக மர­பு­ரிமைச் சொத்­தாகும். அதனால் அதன் உய­ரத்­தையும் மீறி வேறு மத ஸ்தலங்­களை நிர்­மா­ணிக்க முடி­யாது. அதற்­கான அனு­ம­தியும் வழங்­க­மு­டி­யாது என அவர் தெரி­வித்­துள்ளார். லைன் பள்­ளி­வா­சலில் கோபு­ர­மொன்று அமைப்­ப­தற்கு சில வரு­டங்­க­ளுக்கு முன்பு எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது. தலதா மாளி­கையின் திய­வ­தனே நில­மேயும் பஸ­நா­யக்க நில­மே பலரும் எதிர்ப்புத் தெரி­வித்­த­தை­ய­டுத்து நிர்­மா­ணப்­ப­ணிகள் இடை நிறுத்­தப்­பட்­டன. தற்­போது அனு­ம­தி­யின்றி மீண்டும் வேலை­களை ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள் என்றார்.

No comments

Powered by Blogger.