நோன்பாளிகளுக்கு வீதியில் நின்று, உதவிசெய்யும் அமைச்சர் (படங்கள்)
-சுவனப் பிரியன்-
துபாயின் பெண் அமைச்சர் ஷம்மா ஷூஹைல் ஃபாரிஸ். இவர் இளைஞர்களின் நலனுக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர். இவர் என்ன செய்கிறார்? வழியில் மாட்டிக் கொண்ட பல நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க தண்ணீர் பழங்களை கொடுக்கிறார்.
நோன்பு திறக்கும் நேரத்தில் சில சமயம் வீட்டை அடைய முடியாது. வாகன நெரிசல் அதிகமானால் நேரத்துக்கு நம்மால் செல்ல முடியாது. அது போன்ற நேரங்களில் ஒவ்வொரு சிக்னலிலும் வசதி படைத்த தன்னார்வ தொண்டர்கள் பேரித்தம் பழம், தண்ணீர், பழங்கள், கேக்குகள் போன்றவற்றை கொடுப்பதுண்டு. சவுதியிலும் இந்த நிகழ்வை பரவலாக பார்க்கலாம்.
அமைச்சர் என்ற மமதை சிறிதும் இல்லாமல் இறைவனின் பொருத்தத்திற்காக சேவை செய்து வரும் இவரைப் போன்றவர்களை என்ன பாராட்டினாலும் தகும்.
தகவல் உதவி
கல்ஃப் நியூஸ் - 16-06-2016


Post a Comment