Header Ads



புளுமெண்டல் பகுதியில், பதற்ற நிலை - பொலிஸார் குவிப்பு

-வீரகேசரி-

புளுமெண்டல் பகுதியில் சட்டவிரோதமாக அமையப்பெற்றுள்ள வீடுகளை உடைத்தமையினால் பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள பொலிஸாரையும் மீறி வீடுகள் உடைக்கப்படும் இடத்தை நோக்கி மக்கள் படையெடுக்க முயற்சிக்கின்றமையால் பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

மேலும் புளுமெண்டல் பகுதியில் பிரதான வீதியில் சில மக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.