Header Ads



இலங்கையில் ஜோர்தான் நாட்டவருக்கு, மரண தண்டனை

ஜோர்தான் பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

16.19 கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக ஜோர்தான் பிரஜையான அமர் யூசுப் அல் சுதே என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்த நபர் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி கொழும்பு பலாமரச் சந்தியில் பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.