கட்டாரில் அப்துல் காலிக், மௌலவியின் சொற்பொழிவு
Amana bank அணுசரணையில் SLMPQ ஏற்பாடு செய்யும் கத்தார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான விஷேட இப்தார் நிகழ்ச்சி ஜூன் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது இன் ஷா அல்லாஹ்.
லுக்தாவில் அமைந்துள்ள அல் புர்கான் பாடசாலையில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் அப்துல் ஹாலிக் மௌலவி அவர்களது "புனித றமழானின் சிறப்புகள்" எனும் தலைப்பில் சிறப்புரையோடு தராவீஹ் தொழுகை மற்றும் இராப்போசணத்துக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆண்களுக்காக மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் அனைத்து கதார் வாழ் இலங்கையர்களையும் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்
SLMPQ

Post a Comment