Header Ads



வன்முறைக்கு பொதுபல சேனா முயற்சி - முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்க கோரிக்­கை

-விடிவெள்ளி ஏ.ஆர்.ஏ.பரீல்-

மஹி­யங்­க­னையில் இடம்­பெற்ற பௌத்த கொடி எரிப்பு சம்­ப­வத்­தை­ய­டுத்து பொது­ப­ல­சேனா அமைப்பு அளுத்­கமை சம்­பவம் போன்ற ஒன்­றினை உரு­வாக்க முயற்­சிப்­ப­தா­கவும் அப்­ப­குதி முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச்  செய்­யு­மாறும் மஹி­யங்­கனை பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பி­னரும் ஜாதிக பல­சே­னாவின் செய­லா­ள­ரு­மான வட்­ட­ரக்க விஜித தேரர் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாத் பதி­யு­தீ­னி­டமும் நகர திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சர் ரவூப் ஹக்­கீ­மி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

அமைச்­சர்கள் இரு­வ­ரையும் தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு மஹி­யங்­க­னையில் இடம்­பெற்று வரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை விளக்­கி­யுள்­ள­தா­கவும் அமைச்­சர்கள் இரு­வரும் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் இது தொடர்­பாகத் தெரி­விக்­கையில், 'மஹி­யங்­க­னையில் நீண்­ட­கா­ல­மாக முஸ்­லிம்கள் பெரும்­பான்மை இனத்­த­வ­ருடன் ஒற்­று­மை­யா­கவும் நல்­லு­ற­வு­டனும் வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

ஆனால் அங்கு இடம்­பெற்ற பௌத்த கொடி எரிப்பு சம்­ப­வத்­தை­ய­டுத்து பொது­ப­ல­சே­னாவும் இன­வா­தி­களும் இன­வி­ரி­சலை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். 

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மஹி­யங்­க­னையில் நடை­பெற்ற எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்ட பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஆற்­றிய உரை­யை­ய­டுத்து அப்­ப­கு­தியில் உள்ள முஸ்­லிம்கள் மத்­தியில் பீதி ஏற்­பட்­டுள்­ளது.

அவர் அளுத்­க­மையில் ஆற்­றிய உரை­யை­ய­டுத்து  ஏற்­பட்ட வன்­செ­யல்­களை மக்கள் மறந்­து­வி­ட­வில்லை. அதனால் முஸ்லிம் அமைச்­சர்கள் ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் கலந்­து­ரை­யாடி இவ்­வா­றான நிலைமை ஏற்­ப­டா­தி­ருக்க நட­வ­டிக்கை எடுக்கும் படி வேண்­டி­யி­ருக்­கிறேன். 

பௌத்த கொடி எரிப்பு சம்­ப­வத்தில் சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­யப்­பட்­டுள்ள முஸ்லிம் இளை­ஞர்கள் சட்­டத்தின் முன்­நி­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் குற்­ற­வா­ளிகள் என்றால் தண்­டனை வழங்க வேண்­டி­யது சட்­டத்தின் கட­மை­யாகும்.

இது போன்று கைது செய்­யப்­பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெரும்பான்மை இனத்தவர் இருவரும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்தி இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை உருவாக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதாகும் என்றார்.  

3 comments:

  1. Honorable Rauf hakeem and Honorable Rishad badurdeen are not in SL now, they went to mars to do some researches.so still they dont know about this problems.once they come from mars after attack like aluthgama.So dear Monk you dont worry about these problems you just take care of your self.

    ReplyDelete
  2. சுதந்திர நாடொன்றில் அமைதியாக வாழ்ந்து வரும் பல இன மக்களிடையே, குழப்பத்தை விளைவித்து அழிவுக்கு இட்டுச் செல்லத் துடிக்கும் ஞான தேரரைச் சட்டம் இன்னமும் ஏதுமே செய்யாமலிருப்பது ஏனோ தெரியவில்லை.

    ReplyDelete
  3. It's better to send this Ven.Monk as our representative to the parliament then most of our shellfish muslim members Allah may give him the hiddayat.

    ReplyDelete

Powered by Blogger.