பள்ளிவாசல் மீது பிக்குகளும், பொலிஸாரும் விதித்துள்ள தடையை நீக்கு..!
-விடிவெள்ளி ஏ.ஆர்.ஏ.பரீல்-
பாத்யா மாவத்தை பள்ளிவாசலின் சட்ட அனுமதி பெற்ற விஸ்தரிப்புக்கு பௌத்த பிக்குகளின் எதிர்ப்பினையடுத்து பொலிஸார் விதித்துள்ள தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிவாசல் நிர்வாகம் ஜனாதிபதி , பிரதமர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சட்டரீதியான அனுமதி பெற்று மேற்கொள்ளப்படும் விஸ்தரிப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் தடைவிதிப்பதும் மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனவே பாத்யா மாவத்த பள்ளிவாசல் விஸ்தரிப்பு தடை விவகாரம் தொடர்பாக விசாரணை யொன்றினை நடாத்தி நீதிபெற்றுத் தருமாறு மனித உரிமை ஆணைக்குழுவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு எதிராக கடந்த 23 ஆம் திகதி இரவு ஆனந்தசாகர தேரர் தலைமையிலான குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தெஹிவளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்தனர். தேரர்களின் முறைப்பாட்டினையடுத்து தெஹிவளைப் பொலிஸார் கடந்த 24 ஆம் திகதி இருதரப்பினரையும் அழைத்து விசாரணையொன்றினை நடாத்தினர்.
பொலிஸ் நிலையத்தில் பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணியினை தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது. இதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என தேரர்கள் தெரிவித்தனர். பள்ளிவாசல் நிர்வாகிகளும் R.R.T அமைப்பின் சட்டத்தரணிகளும் பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணியினை நிறுத்த முடியாதெனவும் சட்ட ரீதியாக அனுமதிபெற்றே விஸ்தரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
கடந்த 25 ஆம் திகதி மாலை கட்டட நிர்மாணப் பொருட்கள் பள்ளிவாசலுக்கருகில் இறக்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் அங்கு வந்து அதற்குத் தடைவிதித்தனர். இதனையடுத்து கடந்த 26 ஆம் திகதி பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகளை நிறுத்தும்படி பொலிஸார் அறிவித்தல் அனுப்பி வைத்தனர்.
பிரதி பொலிஸ் அத்தியட்சகர் நிர்மாணப்பணிகளை நிறுத்தும்படி கோரியும் நிர்மாணப்பணிகள் நிறுத்தப்படவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரமே நிர்மாணப் பணிகளை நிறுத்த முடியும் என பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்தது. இதேவேளை தெஹிவளை கல்கிசை மாநகர சபை முதல்வரும் வேலைகளை நிறுத்தும்படி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அப்பிரதேச தேரர்கள் பள்ளிவாசலுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலே இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் என்போருக்கு முறைப்பாடு செய்துள்ளது.
இப்பள்ளிவாசல் 2001 ஆம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. 2016 ஆம் ஆண்டில் பள்ளிவாசலாக வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
R.R.T அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவொன்று பள்ளிவாசல் விஸ்தரிப்பினை முன்னெடுப்பதற்கும் முஸ்லிம்களின் உரிமைகளைப்பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இதேவேளை அண்மையில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு மேற்கொண்ட நல்லெண்ண விஜயத்தின் போது உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி பாத்யா மாவத்தை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாத்யா மாவத்தை பள்ளிவாசலின் சட்ட அனுமதி பெற்ற விஸ்தரிப்புக்கு பௌத்த பிக்குகளின் எதிர்ப்பினையடுத்து பொலிஸார் விதித்துள்ள தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிவாசல் நிர்வாகம் ஜனாதிபதி , பிரதமர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சட்டரீதியான அனுமதி பெற்று மேற்கொள்ளப்படும் விஸ்தரிப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் தடைவிதிப்பதும் மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனவே பாத்யா மாவத்த பள்ளிவாசல் விஸ்தரிப்பு தடை விவகாரம் தொடர்பாக விசாரணை யொன்றினை நடாத்தி நீதிபெற்றுத் தருமாறு மனித உரிமை ஆணைக்குழுவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு எதிராக கடந்த 23 ஆம் திகதி இரவு ஆனந்தசாகர தேரர் தலைமையிலான குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தெஹிவளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்தனர். தேரர்களின் முறைப்பாட்டினையடுத்து தெஹிவளைப் பொலிஸார் கடந்த 24 ஆம் திகதி இருதரப்பினரையும் அழைத்து விசாரணையொன்றினை நடாத்தினர்.
பொலிஸ் நிலையத்தில் பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணியினை தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது. இதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என தேரர்கள் தெரிவித்தனர். பள்ளிவாசல் நிர்வாகிகளும் R.R.T அமைப்பின் சட்டத்தரணிகளும் பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணியினை நிறுத்த முடியாதெனவும் சட்ட ரீதியாக அனுமதிபெற்றே விஸ்தரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
கடந்த 25 ஆம் திகதி மாலை கட்டட நிர்மாணப் பொருட்கள் பள்ளிவாசலுக்கருகில் இறக்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் அங்கு வந்து அதற்குத் தடைவிதித்தனர். இதனையடுத்து கடந்த 26 ஆம் திகதி பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகளை நிறுத்தும்படி பொலிஸார் அறிவித்தல் அனுப்பி வைத்தனர்.
பிரதி பொலிஸ் அத்தியட்சகர் நிர்மாணப்பணிகளை நிறுத்தும்படி கோரியும் நிர்மாணப்பணிகள் நிறுத்தப்படவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரமே நிர்மாணப் பணிகளை நிறுத்த முடியும் என பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்தது. இதேவேளை தெஹிவளை கல்கிசை மாநகர சபை முதல்வரும் வேலைகளை நிறுத்தும்படி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அப்பிரதேச தேரர்கள் பள்ளிவாசலுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலே இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் என்போருக்கு முறைப்பாடு செய்துள்ளது.
இப்பள்ளிவாசல் 2001 ஆம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. 2016 ஆம் ஆண்டில் பள்ளிவாசலாக வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
R.R.T அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவொன்று பள்ளிவாசல் விஸ்தரிப்பினை முன்னெடுப்பதற்கும் முஸ்லிம்களின் உரிமைகளைப்பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இதேவேளை அண்மையில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு மேற்கொண்ட நல்லெண்ண விஜயத்தின் போது உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி பாத்யா மாவத்தை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Why do not you go to court? My3 & Ranil will do nothing because the elections are over....
ReplyDeleteThe monks are taking law and order in the good governance government.
ReplyDeleteThe GG government is seeing as a scene
Ranil is a Wolf in Sheep clothing. This so-called good governance is good only on paper.
ReplyDeleteDon't give up our rights.That was our biggest mistake in DAMBULLA
ReplyDelete