Header Ads



"இயற்கை அனர்த்தம் தொடர்பில், வதந்திகள் பரப்பப்படுகின்றன"

கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து
வெளியேற்றப்பட்ட 7,763 குடும்பங்களில் 196 குடும்பங்களைச் சேர்ந்த 1120 பேர்
மாத்திரமே முகாம்களில் இன்னமும் தங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர
பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இவ்விபத்தில் ஒரு உயிரிழப்பு மாத்திரமே ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் இயற்கை
அனர்த்தம் ஏற்படுவதற்கான எச்சரிக்கை தோன்றியுள்ளதாக பல வதந்திகள் பரப்பப்படுகின்றன.
இவ்வாறான வதந்திகளுக்கு ஊடகங்கள் இடமளிக்கக் கூடாது என்றும் அமைச்சர்
கேட்டுக்கொண்டார். விபத்துச் சம்பவம் தொடர்பில் எந்தத் தகவல்களையும் அரசாங்கம்
மறைக்கவில்லை.

இராணுவ முகாமில் ஆயுதக்களஞ்சியத்தில் இவ்வாறான பாரிய தீ விபத்து ஏற்பட்டது
இலங்கைக்கோ அல்லது உலகத்துக்கோ இதுவே முதற்தடவையல்ல. இவ்வாறான அனர்த்தங்களை
எதிர்கொண்ட அனுபவம் கடந்தகாலத்தில் இருப்பதால் இதிலிருந்து மீள்வதற்கான சகல
ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மேலும்
தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.