Header Ads



வசீம் தாஜூடீன் கொலை - ஒப்புதல் வாக்குமூலத்திற்கு தயாராகும் அனுர சேனாநாயக்க

மேல் மாகாண முன்னாள் பிரதிக் காவல்தறை மா அதிபர் அனுர சேனாநாயக்க ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றை அளிக்க உள்ளார்.

பிரபல ரகவர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் நீதிமன்றில் அனுர சேனாநாயக்க வாக்கு மூலம் ஒன்றை அளிக்க உள்ளார்.

அடுத்த வழக்கு விசாரணைகளின் போது இவ்வாறு விசேட வாக்கு மூலம் ஒன்றை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மே மாதம் 23ம் திகதி அனுர சேனாநாயக்கவை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாரஹேன்பிட்டி குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க ஏற்கனவே இவ்வாறான வாக்கு மூலமொன்றை நீதவான் முன்னிலையில் அளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.