"மினாராக்களை நிறுவி இலங்கை ஓர் முஸ்லிம் நாடு என, சர்வதேசத்துக்கு அடையாளப்படுத்த திட்டம்"
-விடிவெள்ளி ARA.Fareel-
முஸ்லிம்கள் இலங்கையில் பள்ளிவாசல்களின் கோபுரங்களை (மினாரா) உயரமாக நிறுவி இலங்கை ஓர் முஸ்லிம் நாடு என சர்வதேசத்துக்கு அடையாளப்படுத்த திட்டமிட்டு செயற்படுகிறார்கள்.
கண்டி லைன் பள்ளிவாசலின் கோபுர நிர்மாணம் இதற்கு உதாரணமாகும் என சிங்ஹலே அமைப்பு தெரிவித்துள்ளது.
கண்டி லைன் பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மினாராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்ஹலே பொதுபலசேனா உட்பட பல அமைப்புகளைச் சேர்ந்த தேரர்களும் பொது மக்களும் ஆர்ப்பாட்டமொன்றினை நடாத்தினர்.
மினாரா நிர்மாணத்தை உடன் நிறுத்தும்படி கோஷங்கள் எழுப்பினர். எதிர்ப்பு ஆரப்பாட்டம் தொடர்பில் கருத்து ஊடகங்களுக்கு வெளியிடுகையிலே சிங்ஹலே அமைப்பின் செயலாளர் மெதில்லே பஞ்சாலோக தேரர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகாவ உலக மரபுரிமைச் சின்னமாகும். தலதா மாளிகாவின் உயரத்தினை விடவும் பள்ளிவாசலின் கோபுரம் உயரமாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனாலேயே நாம் இதனை எதிர்க்கிறோம். இந்தக் கோபுரம் அமைப்பதற்கான சட்டரீதியான அனுமதியும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.
மகாநாயக்க தேரர்களும் மக்களும் இதனை விரும்பவில்லை. கண்டி மாநகர விசேட ஆணையாளர் நிர்மாணப்பணிகளை நிறுத்தியுள்ளார்.
என்றாலும் சிலவேளை சிறிது கால இடைவெளியின் பின்பு மீண்டும் கோபுரம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படலாம். அதனால் சிங்ஹலே அமைப்பு இதுவிடயத்தில் எதிர்காலத்தில் அவதானத்துடன் இருக்கும்.
இதுவிடயமாக நாம் மகாநாயக்க தேரர்கள், கண்டி நகர மக்கள், வர்த்தகர்கள் அனைவரையும் தெளிவுபடுத்தியுள்ளோம். தலதா மாளிகையிலிருந்தும் 200 மீற்றர் தூரத்திலேயே இந்தப் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பௌத்த மத தலங்களுக்கு அருகில் உயரமாக பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுவதாலே பிரச்சினைகள் எழுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் பௌத்த நாட்டை ஒரு முஸ்லிம் நாடாக சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டும் முயற்சி என்றே சிங்ஹலே கருதுகிறது என்றார்.

முஸ்லிம்களை காட்டி காட்டித்தான் அரபு நாடுகளில் பிச்சை எடுப்பது இதை முஸ்லிம்பாராளுமன்ற உறுப்பினர்கள் அரபு நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் இன்னும் இன்னும் கூனிக்குறுகி கும்பிடு போடாமல் தலை நிமிர்ந்து அரச, தலைவர்களிடம் உறப்பாக பேச வேண்டும் நல்லாட்சி என்று சொல்லி இந்த நாட்டில் நல்லது நடந்ததாக தெரியவில்லை
ReplyDeleteஆமாம்! ஒன்றும் தேவையில்லை அரபு நாடுகளில உள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்பினாலே போதும்.
Deleteநம் அரசியல்வாதிகள் நாய்கள் இறைச்சி முல்லுக்கு அழைவது போல் அரசியல் கதிரைக்காக எதையும் செய்வார்கள்.
மினாரா கூடுமா? கூடாதா? என்று நமது சகோதரர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் தலதா மாளிகையைவிட பள்ளிவாயல் உயர்ந்துவிடும் என்பதுதான் எதிர்ப்பாளர்களின் பிரச்சனை. எங்கேயாவது குழப்ப அவர்கள் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சிறிய விடயம் சாதகமாகிவிட்டால் அதைவைத்து ஊதிவிடுவார்கள். இப்போது அவர்களுக்கு கிடைத்திருப்பது கண்டி பள்ளிவாயலின் மினாரா. மினாரா இஸ்லாமிய அடையாளச் சின்னங்களில் ஒன்று. இதைக் கட்டாமல் ஆக்கிவிட்டால் அவர்களுக்கு ஒரு புதுத்தெம்பு ஏற்பட்டுவிடும். அதேவேளை பிரச்சனையும் வரக்கூடாது. ஆனால் உயரத்தில் குறைவாக மினாராவை நிர்மானிப்பது என கண்டி பள்ளிவாயல் சம்மேளனம் தீர்மானித்திருக்கிறது. இவ்வாறு குறைவாகக் கட்டுவதால் எதிர்ப்பாளர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரேயடியாக அதைக் கட்டாமல் தடுத்துவிட்டால் அவர்கள் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்வார்கள். அந்த வெற்றியுடன் மேலும்பல விடயங்களைத் தடுக்க முயற்சி செய்வார்கள். எனவே நோன்பு முடியும் வரை எந்தப் பிரச்சனையும் போடாமல் நோன்பு முடிந்த பின்னர் தலதா மாளிகையைவிட உயரம் குறைவாகக் கட்ட முயற்சி எடுக்கலாம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHehe உலகத்தில் உள்ள மற்றவர்கள் இந்த " மோட சினஹலே" யைப்போல் மடையர்கள் என நினைத்துவிட்டார்களா??
ReplyDeleteமினாரா கட்டிவிட்டால் இலங்கை முஸ்லிம் நாடு என நம்புவதற்கு அவர்கள் கேனக்கிறுக்கிறர்லல்ல.
Thangalai kinattuth thavalaikal enru meendum nirupiththullarkal.Kavi udaiyum moddanththalaium avarkalin adavadiththanaththukku kavasam.Singala inaththin kavalarkal ivarkal alla alla. Maraka Singala inaththai thalai kuniya vaipavarkal. Ivarkalai sariyana idaththil vaiththa thesaththalaivar maraintha Sir.Jhon.Kottalawala.Avarukku emathu salute.
ReplyDeleteYaaro oru koottam ivanugalukku thittam pottu ideas cudukkuranga !!! Iwargal eppadi sayalpada !! ??
ReplyDeleteSinhaleta berivechchadeya maa reka le Kerala thiyana ithihasaya amathaka karanna epaa.
ReplyDeleteDo not forget the history of the Muslim lady who sacrificed her life to save a king in Sri Lanka.
Singaththin reththame, nee singala mannanaik kaaththa reththathai maranthu vittayo.