Header Ads



"எனக்கு இன்னமும் உத்தியோகபூர்வ இல்லம், வழங்கப்படாமை குறித்து பேச விரும்பவில்லை"

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் இதுவரையில் வழங்கப்படவில்லை என பொதுநிர்வாக அமைச்சின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வீடுகள் உள்ள சில அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களையும் பயன்படுத்தி வரும் நிலையில், சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சம்பந்தனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

100000 ரூபா முதல் 250000 ரூபா வரையிலான மாத வாடகையின் அடிப்படையில் அரசாங்கம் பல அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வீடுகளைப் பயன்படுத்தும் பல அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வாடகைக்கு வழங்கப்படும் வீடுகளில் அமைச்சர்கள் தங்குவதில்லை எனவும் அவர்களது உறவினர்கள், அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் சிலர் இந்த வீடுகளை கூடுதல் தொகைக்கு மீள் வாடகைக்கு விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை என்பதனை பொதுநிர்வாக அமைச்சு உயர் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமக்கு இன்னமும் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படவில்லை எனவும் அது குறித்து பேச தாம் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. He is a real politician apart from our political differences.

    ReplyDelete

Powered by Blogger.