குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலிக்கு, உலகளவில் அஞ்சலி
தன்னுடைய 74-வது வயதில் காலமான குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலிக்கு உலகளவில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
உண்மைக்காக போராடியவர் என்று முகமது அலியை அழைத்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கடினமான நேரத்தில் உறுதியாக நின்றவர். அவருடைய வெற்றி இன்றைய அமெரிக்க மக்களுக்கு உதவியுள்ளது என்று புகழ்ந்துள்ளார்.
குத்துசண்டையில் உலக சாம்பியனாக வருவேன். உனக்கு உலகை சுற்றி காட்டுவேன். அம்மாவுக்கு புதிய வீடு வாங்கி கொடுப்பேன் என்று சிறுவனாக இருந்தபோதே தன்னிடம் கூறிய அனைத்தையும் முகமது அலி நிறைவேற்றியுள்ளதாக சகோதரர் ரஹ்மான் அலி நினைவுகூர்ந்துள்ளார்.
குத்துச்சண்டை போட்டியில் மூன்று முறை உலக ஹெவி வெய்ட் சாம்பியனாக ஜொலித்த இவர் சிவில் உரிமையை பரப்புரை செய்தவர்.
தன்னைத்தானே, 'மாபெரும் மனிதன்’ என அறிவித்துக் கொண்ட முகமது அலி, பரபரப்பான போட்டிகளில் திரில் வெற்றிகளை குவித்தவர்.
இனவெறிக்கு எதிராக கடுமையாக செயல்பட்டவர்.
வியட்நாமுக்கு எதிரான போரின்போது அமெரிக்க ராணுவத்தில் இணைந்து பணியாற்ற மறுத்தது மற்றும் 'நேஷன் ஆஃப் இஸ்லாம்’ என்ற கருப்பின இஸ்லாம் குழுவில் இணைந்தது ஆகிய நடவடிக்கைகளால் அமெரிக்கர்களின் வெறுப்புக்கு ஆளானார்.
அவரது மத நம்பிக்கைகள் காரணமாக, வியட்நாம் போரின் போது அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்ததால், அவரது உலக சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் அவரது குத்துச்சண்டை போட்டிகள் முடங்கின.

Innnalilahi wainnailaihi Rajioon
ReplyDelete