அலவி மௌனாவின் ஜனாஸா நாளை 3.30 மணிக்கு தெஹிவளையில் நல்லடக்கம்
-அஷ்ரப் ஏ சமத்-
மேல் மாகாண ஆளுனராக 13 வருடங்களும் கபிணட் அமைச்சராக. பிரதியமைச்சராகவும் முத்த தொழிற்சங்கவாதியும் ஸ்ரீ.ல.சு கட்சியில் உப தலைவருமாக பதவி வகித்த அலவி மொளலான இன்று பி.பகல் 6.00 மணியளவில் தணியாா் வைத்தியசாலையில் காலமானாா்.
இவரது ஜனாசா தற்பொழுது தெஹிவளை - மல்வத்தையில் உள்ள உள் வீதியில் உள்ள் 6 இல வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 9 மணியில் இருந்து சகல இன மக்களும் அரசியல் வாதிகள் தொழிற்சங்க வாதிகள் ஜனாசாவை பாா்வையிட்டு வருகின்றனா். நாளை (17) வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தெஹிவளை ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென நக்கீப் மொலானா தெரிவித்தாா்.

Post a Comment