1956 இல் சிங்களம் படிப்பதை ஆத்திரத்தில் நிறுத்தினேன், இன்று குறையுடன் பேசுகிறேன் - விக்னேஸ்வரன்
சிங்கள அறிவு இல்லாதவர்கள் வருங்காலத்தில் புறக்கணிக்கப்படக்கூடும். ஆகவே அரசியலை மறந்து சிங்கள மொழியாற்றலையும் விருத்தி செய்யுங்கள் என மாணவர்களிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கலைமகள் திருவுருவ சிலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
இன்று மாணவர்கள் மத்தியில் ஒழுக்க நெறிகள் சற்று குறைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மாணவர்களுக்கு சிறு வயதில் இருந்தே சமய அடிப்படையிலான ஒழுக்கத்துடன் கூடிய கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.
இப் பாடசாலையில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் சமய ஈடுபாட்டுடன் கூடிய கற்றல் முறைமையைக் கைக்கொண்டிருப்பதை உங்கள் அதிபர் வாயிலாக அறிந்து கொண்டேன்.
சமய வாழ்க்கை என்பது ஆணவம் தவிர்ந்த வாழ்க்கை. இறைவன் இருக்கின்றான் என்பது எமது மனதில் படிந்து விட்டால் ஆணவம் தானாகவே எம்மை விட்டு நீங்கி விடும். தன்னம்பிக்கை வேறு ஆணவம் வேறு. இறைபக்தியுடன் சேர்ந்த தன்னம்பிக்கை எமக்கு வேண்டும்.
தன்னையே முதன்மைப்படுத்தும் ஆணவம் அழிய வேண்டும். அது நடந்தால் எமது சமூகம் மாறிவிடும். ஒழுக்கம் தானாக வேரூன்றத் தொடங்கிவிடும்.
சின்னஞ்சிறார்களை அன்புடன் அரவணைத்து அவர்களுக்கான கல்வியைப் பரந்த, ஆழமான, நுண்ணறிவுடன் கற்கக் கூடிய விதத்தில் சிறு வயதில் இருந்தே பயிற்றுவித்தல் அவசியமாகும். பாடசாலைக் கல்வியானது எதிர்கால சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படக்கூடியவிடத்தில் அமைந்திருத்தல் அவசியமாகின்றது.
ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்பதை நாம் மறத்தல் ஆகாது. எமது பல்கலைக்கழக மாணவர்களில் பலர் எதுவித குறிக்கோளோ எதிர்கால மேம்பாட்டிற்கான நோக்கமோ இன்றி பல்கலைக்கழக புகுமுக தேர்வு பரீட்சைகளில் காணப்படும் இலகுவான பாடங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் திறமைச் சித்திகளைப் பெற்று பல்கலைக்கழக கற்கை நெறிகளையும் நிறைவு செய்த பின்னர் தான் அவர்களுக்குப் புரிகின்றது தாம் தெரிவு செய்த பாடநெறிகள் தமது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவ முடியாதவை என்று.
எனவே ஆரம்பப் பாடசாலைப் பொழுதில் இருந்தே குழந்தைகள் தமது வருங்காலம் பற்றிச் சிந்திக்கத் தொடங்க வேண்டும். மாணவர்கள் க.பொ.த.சாதாரண தர நிலைகளில் கல்வி கற்கின்ற போதே தமது எதிர்காலம் பற்றிய ஒரு தூர நோக்கு சிந்தனையுடன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடல் வேண்டும்.
அனைத்து மாணவர்களுக்கும் நான் கூறக்கூடிய முக்கிய அறிவுரை என்னவெனில் ஆங்கில மொழிக் கற்கையில் சிறிய வகுப்பில் இருந்தே கூடிய கவனஞ் செலுத்துங்கள் என்பதே. ஆங்கிலம் கற்பதால் உங்கள் தமிழ் புறக்கணிக்கப்பட்டு விடாது. மாறாக எங்கள் தமிழ் மொழி உலக ரீதியாகக் கருத்துக்களைத் தன்னுள் பெற்றெடுக்க அது உதவி புரிகின்றது.
தென்னிந்தியாவில் சட்டம் தமிழில் படிப்பிக்காத காலத்தில் 1971ம் ஆண்டில் நான் சட்டத்தை முதன் முதலில் தமிழில் சட்டக் கல்லூரியில் பயிற்றுவித்தேன். தமிழ் மொழிமூலம் சட்டம் பயிற்றுவிக்க எனது ஆங்கில அறிவே உறுதுணையாக இருந்தது. ஆகவே ஆங்கிலத்தைத் தயவு செய்து புறக்கணிக்காதீர்கள்.
மிகப் பின்தங்கிய கிராமங்களில் இருந்து கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை மிகத் திறமையாகக் கற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான சில மாணவர்கள் அவர்களின் ஆங்கிலப் புலமைக் குறைவினால் தமது பல்கலைக்கழக கற்கை நெறிகளைத் தொடர்ந்து கற்க முடியாது பல்கலைக்கழகத்தை விட்டு விலகி சிறு சிறு தொழில் முயற்சிகளில் இப்போது ஈடுபட்டிருப்பதாக நாம் அறியவந்துள்ளோம்.
இது வேதனைக்குரியது. எனவே மொழி அறிவு ஒவ்வொரு மாணவ மாணவியரினதும் மூல வேர் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு இம் மாணவர்கள் சிறு வயதில் இருந்தே ஆங்கிலப் பாடத்தை விரும்பிக் கற்க வேண்டும்.
அவ்வாறு இம் மாணவர்கள் விரும்பிக் கற்கக் கூடிய விதத்தில் ஆங்கிலப் பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியர்களும் இலகு நடையில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அதன் மூலம் வடபகுதி மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும்.
இலங்கையின் மற்ற மாகாணங்களுடன் ஒப்பு நோக்கும் போது எம் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குபவர்களாக மிளிர வேண்டும். அந் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்புகின்றேன்.
கடைசியாக ஒரு வேண்டுகோள். எமது இலங்கை வாழ் மக்களிடையே ஐயமும், சந்தேகமும், மனக்கிலேசமும், அவநம்பிக்கையும், ஆத்திரமும் இதுகாறும் ஏற்பட முக்கிய காரணம் தவறான புரிதலாகும். இருமொழி பேசும் மக்களிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமானால் ஒருவர் மொழியை ஒருவர் கற்க வேண்டும்.
நோர்வே போய் அவர்கள் மொழியை எம்மவர் கற்கின்றார்கள், பிரான்ஸ் போய் பிரேஞ்சு மொழியைக் கற்கின்றார்கள். ஆனால் நாம் சிங்கள மொழியைப் புறக்கணிக்கின்றோம்.
நான் சிங்களம் படிக்கத் தொடங்கியது 1955ம் ஆண்டில். 1956ம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்;டம் கொண்டுவந்ததும் ஆத்திரத்தில் சிங்கள மொழியைப் படிப்பதை நிறுத்திக் கொண்டேன். இன்று குறையுடன் தான் சிங்கள ஊடகங்களுக்கு சிங்களத்தில் எமது பக்க அரசியல் குறைபாடுகளை நான் கூறி வருகின்றேன்.
நான் அன்று தொடங்கிய சிங்களப் படிப்பைத் தொடர்ந்து வந்திருந்தேனானால் எந்தச் சிங்கள அரசியல்வாதிக்கும் அவரின் மொழியிலேயே சுடச் சுடப் பதில் அளித்திருக்கலாம்.
இன்று சிங்கள மாணவர்கள் கட்டாயமாகத் தமிழ் படிக்கத் தொடங்கியுள்ளார்கள். விரைவில் தமிழ்ப் பேசும் சிங்கள அலுவலர்கள் வடகிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்படப் போகின்றார்கள்.
நாங்கள் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். சிங்கள அறிவு இல்லாதவர்கள் வருங்காலத்தில் புறக்கணிக்கப்படக்கூடும். ஆகவே அரசியலை மறந்து சிங்கள மொழியாற்றலையும் விருத்தி செய்யுங்கள் என மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார்.
யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கலைமகள் திருவுருவ சிலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
இன்று மாணவர்கள் மத்தியில் ஒழுக்க நெறிகள் சற்று குறைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மாணவர்களுக்கு சிறு வயதில் இருந்தே சமய அடிப்படையிலான ஒழுக்கத்துடன் கூடிய கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.
இப் பாடசாலையில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் சமய ஈடுபாட்டுடன் கூடிய கற்றல் முறைமையைக் கைக்கொண்டிருப்பதை உங்கள் அதிபர் வாயிலாக அறிந்து கொண்டேன்.
சமய வாழ்க்கை என்பது ஆணவம் தவிர்ந்த வாழ்க்கை. இறைவன் இருக்கின்றான் என்பது எமது மனதில் படிந்து விட்டால் ஆணவம் தானாகவே எம்மை விட்டு நீங்கி விடும். தன்னம்பிக்கை வேறு ஆணவம் வேறு. இறைபக்தியுடன் சேர்ந்த தன்னம்பிக்கை எமக்கு வேண்டும்.
தன்னையே முதன்மைப்படுத்தும் ஆணவம் அழிய வேண்டும். அது நடந்தால் எமது சமூகம் மாறிவிடும். ஒழுக்கம் தானாக வேரூன்றத் தொடங்கிவிடும்.
சின்னஞ்சிறார்களை அன்புடன் அரவணைத்து அவர்களுக்கான கல்வியைப் பரந்த, ஆழமான, நுண்ணறிவுடன் கற்கக் கூடிய விதத்தில் சிறு வயதில் இருந்தே பயிற்றுவித்தல் அவசியமாகும். பாடசாலைக் கல்வியானது எதிர்கால சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படக்கூடியவிடத்தில் அமைந்திருத்தல் அவசியமாகின்றது.
ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்பதை நாம் மறத்தல் ஆகாது. எமது பல்கலைக்கழக மாணவர்களில் பலர் எதுவித குறிக்கோளோ எதிர்கால மேம்பாட்டிற்கான நோக்கமோ இன்றி பல்கலைக்கழக புகுமுக தேர்வு பரீட்சைகளில் காணப்படும் இலகுவான பாடங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் திறமைச் சித்திகளைப் பெற்று பல்கலைக்கழக கற்கை நெறிகளையும் நிறைவு செய்த பின்னர் தான் அவர்களுக்குப் புரிகின்றது தாம் தெரிவு செய்த பாடநெறிகள் தமது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவ முடியாதவை என்று.
எனவே ஆரம்பப் பாடசாலைப் பொழுதில் இருந்தே குழந்தைகள் தமது வருங்காலம் பற்றிச் சிந்திக்கத் தொடங்க வேண்டும். மாணவர்கள் க.பொ.த.சாதாரண தர நிலைகளில் கல்வி கற்கின்ற போதே தமது எதிர்காலம் பற்றிய ஒரு தூர நோக்கு சிந்தனையுடன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடல் வேண்டும்.
அனைத்து மாணவர்களுக்கும் நான் கூறக்கூடிய முக்கிய அறிவுரை என்னவெனில் ஆங்கில மொழிக் கற்கையில் சிறிய வகுப்பில் இருந்தே கூடிய கவனஞ் செலுத்துங்கள் என்பதே. ஆங்கிலம் கற்பதால் உங்கள் தமிழ் புறக்கணிக்கப்பட்டு விடாது. மாறாக எங்கள் தமிழ் மொழி உலக ரீதியாகக் கருத்துக்களைத் தன்னுள் பெற்றெடுக்க அது உதவி புரிகின்றது.
தென்னிந்தியாவில் சட்டம் தமிழில் படிப்பிக்காத காலத்தில் 1971ம் ஆண்டில் நான் சட்டத்தை முதன் முதலில் தமிழில் சட்டக் கல்லூரியில் பயிற்றுவித்தேன். தமிழ் மொழிமூலம் சட்டம் பயிற்றுவிக்க எனது ஆங்கில அறிவே உறுதுணையாக இருந்தது. ஆகவே ஆங்கிலத்தைத் தயவு செய்து புறக்கணிக்காதீர்கள்.
மிகப் பின்தங்கிய கிராமங்களில் இருந்து கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை மிகத் திறமையாகக் கற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான சில மாணவர்கள் அவர்களின் ஆங்கிலப் புலமைக் குறைவினால் தமது பல்கலைக்கழக கற்கை நெறிகளைத் தொடர்ந்து கற்க முடியாது பல்கலைக்கழகத்தை விட்டு விலகி சிறு சிறு தொழில் முயற்சிகளில் இப்போது ஈடுபட்டிருப்பதாக நாம் அறியவந்துள்ளோம்.
இது வேதனைக்குரியது. எனவே மொழி அறிவு ஒவ்வொரு மாணவ மாணவியரினதும் மூல வேர் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு இம் மாணவர்கள் சிறு வயதில் இருந்தே ஆங்கிலப் பாடத்தை விரும்பிக் கற்க வேண்டும்.
அவ்வாறு இம் மாணவர்கள் விரும்பிக் கற்கக் கூடிய விதத்தில் ஆங்கிலப் பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியர்களும் இலகு நடையில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அதன் மூலம் வடபகுதி மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும்.
இலங்கையின் மற்ற மாகாணங்களுடன் ஒப்பு நோக்கும் போது எம் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குபவர்களாக மிளிர வேண்டும். அந் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்புகின்றேன்.
கடைசியாக ஒரு வேண்டுகோள். எமது இலங்கை வாழ் மக்களிடையே ஐயமும், சந்தேகமும், மனக்கிலேசமும், அவநம்பிக்கையும், ஆத்திரமும் இதுகாறும் ஏற்பட முக்கிய காரணம் தவறான புரிதலாகும். இருமொழி பேசும் மக்களிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமானால் ஒருவர் மொழியை ஒருவர் கற்க வேண்டும்.
நோர்வே போய் அவர்கள் மொழியை எம்மவர் கற்கின்றார்கள், பிரான்ஸ் போய் பிரேஞ்சு மொழியைக் கற்கின்றார்கள். ஆனால் நாம் சிங்கள மொழியைப் புறக்கணிக்கின்றோம்.
நான் சிங்களம் படிக்கத் தொடங்கியது 1955ம் ஆண்டில். 1956ம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்;டம் கொண்டுவந்ததும் ஆத்திரத்தில் சிங்கள மொழியைப் படிப்பதை நிறுத்திக் கொண்டேன். இன்று குறையுடன் தான் சிங்கள ஊடகங்களுக்கு சிங்களத்தில் எமது பக்க அரசியல் குறைபாடுகளை நான் கூறி வருகின்றேன்.
நான் அன்று தொடங்கிய சிங்களப் படிப்பைத் தொடர்ந்து வந்திருந்தேனானால் எந்தச் சிங்கள அரசியல்வாதிக்கும் அவரின் மொழியிலேயே சுடச் சுடப் பதில் அளித்திருக்கலாம்.
இன்று சிங்கள மாணவர்கள் கட்டாயமாகத் தமிழ் படிக்கத் தொடங்கியுள்ளார்கள். விரைவில் தமிழ்ப் பேசும் சிங்கள அலுவலர்கள் வடகிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்படப் போகின்றார்கள்.
நாங்கள் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். சிங்கள அறிவு இல்லாதவர்கள் வருங்காலத்தில் புறக்கணிக்கப்படக்கூடும். ஆகவே அரசியலை மறந்து சிங்கள மொழியாற்றலையும் விருத்தி செய்யுங்கள் என மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார்.

Post a Comment