Header Ads



மைத்திரியின் தலைமையில் கொத்து, மஹிந்த தலைமையில் சுண்டளவு தவளைகள்

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த மே தினக் கூட்டம் ஒரு சுண்டு நிறை அளவானது எனவும் காலி சமனல மைதானத்தில் நடந்த மே தினக் கூட்டம் ஒரு கொத்து நிறைக்கு அளவானது எனவும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் இன்று -02- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

பழைய கொத்தளவு நிறையை நீங்கள் பார்த்துள்ளீர்களா?. அதேபோல் சுண்டளவை பார்த்துள்ளீர்களா?.ஒரு கொத்தளவு நிறை என்பது நான்கு சிண்டளவு சேர்ந்தது. நாங்கள் ஒரு கொத்தளவில் சோறு சாப்பிட்டவர்கள்.

ஒரு மே தினக் கூட்டம் கொத்தளவு நிறையை போல் பாரிய கூட்டமாக நடந்தது. மற்றுமொன்று சுண்டளவு கூட்டத்துடன் நடந்தது. அந்த மே தினக் கூட்டத்தில் தவளைகள் இணைந்து கொண்டன. நாங்கள் வெற்றிகரமான மே தினத்தை நடத்தினோம்.

இலங்கை சுதந்திரக் கட்சியின் 40 தொகுதி அமைப்பாளர்களுக்கு மைதானத்தை காண முடியாது போனது. அவர்கள் திரும்பிச் செல்ல நேரிட்டது. இதனால், அடுத்த மே தினக் கூட்டத்தை எந்த மைதானத்தில் நடத்த வேண்டும் என்று யோசித்து வருகின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது தனிநபரை சார்ந்த ஒரு கட்சியல்ல. கட்சி என்ற வகையில் மிகப் பெரியளவில் நாங்கள் இம்முறை மே தினக் கூட்டத்தை நடத்தினோம் எனவும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.