அதிர்ந்துபோன பசில்
-Tm-
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்ட பசில் ராஜபக்ஷவை, மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதற்காக வாகனத்தில் ஏற்றியபோது, அங்கு குழுமியிருந்த ஒருவர் பொதியொன்றை வழங்கினார்.
அதனை வாங்கி, தான் இருக்கவேண்டிய ஆசனத்தில் ஒதுக்குபுறமாக வைத்த பசில், அதையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். அது என்னவென்று தெரியவில்லை. எனினும், பொதியை வழங்கியவர், பசில் ராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளர் என்றும், சிறுபண்டங்கள் அடங்கிய உணவுப் பொதியையே அவர் வழங்கியதாகவும் அங்கு குழுமியிருந்தவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment