Header Ads



"ஹக்­கீமும் ஹசன்­அ­லியும் ­வி­ரைவில், கூட்டறிக்­கை வெளி­யி­ட­வுள்­ளார்கள்"


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன்­அ­லிக்கும் கட்­சிக்கும் இடையில் பல மாத­கா­ல­மாக நில­விய முரண்­பா­டுகள் உட்­பட அனைத்து உள்­ளக முரண்­பா­டு­க­ளுக்கும் தீர்வு காணப்­பட்­டுள்­ளன. 

புதன்­கி­ழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முக்கும் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலிக்­கு­மி­டையில் நடை­பெற்ற சந்­திப்பின் போதே அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு எட்­டப்­பட்­டுள்­ளது

இச்­சந்­திப்பு இரு­வ­ருக்­கு­மி­டையில் பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்தை மூலம் சுமு­க­மாக தீர்த்து வைப்­ப­தற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் வேந்தர் ஏ.எம்.இஸ்­ஸாக்கின் இல்­லத்தில் கொழும்பில் இடம்­பெற்­றது. தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் வேந்தர் ஏ.எம்.இஸ்ஸாக் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்கும் சுமு­க­மான தீர்வு காணப்­பட்­டுள்­ளது.

அனைத்துப் பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­பட்­டு­விட்­டன. தலைவர் ரவூப் ஹக்­கீமும் செய­லாளர் நாயகம் ஹசன்­அ­லியும் வெகு­வி­ரைவில் கூட்டு அறிக்­கை­யொன்­றினை வெளி­யி­ட­வுள்­ளார்கள். அவ்­வ­றிக்­கையில் அனைத்து விட­யங்­களும்  தெளி­வுப்­ப­டுத்­தப்­படும் என்றார். 

No comments

Powered by Blogger.