சவூதி அரேபியாவின் இஸ்லாத்தை, இலங்கை முஸ்லிம்கள் பின்பற்றக்கூடாது - ரொஹான் குணரத்ன
கலாநிதி ரொஹான் குணரத்ன
- தமிழில்: எம்.ஐ.அப்துல் நஸார் -
இலங்கையைச் சேர்ந்த கலாநிதி ரொஹான் குணரத்ன நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஆய்வுக்கான சிங்கப்பூர் சர்வதேச மத்திய நிலையத்தின் தலைவராகும் கடமையாற்றுகிறார். சிலோன் டுடே பத்திரிகைக்கு அவர் அளித்த பிரத்தியேக நேர்காணலில் முக்கிய பகுதிகளை வாசகர்களுக்கு தருகின்றோம்."
ஐ.எஸ் அமைப்பு தெற்காசிய பிராந்தியத்தை இலக்காகக் கொண்டு உள்ளூர் ஜிஹாத் குழுக்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி வருகின்றது. தெற்காசிய பிராந்தியத்தில் ஐ.எஸ் அமைப்பின் பிரசன்னம் பற்றி பகுப்பாய்வு செய்வது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
பதில்: பயங்கரவாதத்தின் காரணமாகவும் முன்னோர்களின் கடும்போக்குக் கொள்கைகள் காரணமாகவும் இலங்கை முப்பது வருடங்களாக மிகப் பெரும் துன்பத்தை அனுபவித்துள்ளது. தமக்கு தனியான நாடொன்று வேண்டுமென்றும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழ முடியாது என்றும் மோசமான எண்ணங்களை அரசியல்வாதிகள் தமிழ் இளைஞர்கள் மனதில் விதைத்து விட்டதன் விளைவே தமிழ் புலிப் பயங்கரவாதமாகும்.
இன்று ஐ.எஸ் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் பயங்கரவாதக் குழு இஸ்லாம் எங்கள் மத நம்பிக்கை என்றும் ஏனைய மத நம்பிக்கை கொண்டோருக்கு எதிராக நாம் சண்டையிட வேண்டும் என்றும் நச்சு விதையினை இலங்கை உட்பட உலகெங்கும் உள்ள முஸ்லிம் இளைஞர்களின் மனதில் விதைத்து வருகின்றது. பௌதீக ரீதியாகவும் இணையத்தள ரீதியாகவும் ஒருவகை சகிப்புத்தன்மையற்ற நிலையும், கடும்போக்கும் போதிக்கப்படுகின்றன.
இலங்கை உட்பட தெற்காசியாவின் மிகச் சொற்ப எண்ணிக்கையிலான முஸ்லிம்களே ஐ.எஸ் இன் சிந்தனைகளில் நம்பிக்கை வைத்து ஆதரிக்கின்றனர்.
தெற்காசியாவில் ஐ.எஸ் அமைப்பு கொர்சான் இஸ்லாமிய தேசம் என்ற கட்டமைப்பினை உருவாக்கியுள்ளது. இது ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் எல்லையில் அமைந்திருப்பதோடு தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகின்றது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் சுமார் 40 இலங்கையர்கள் ஐ.எஸ் அமைப்புடன் இணைவதற்காக ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டனர். இவர்களுள் சிலர் சண்டையில் கொல்லப்பட்டு விட்டனர்.
மிகவும் அமைதி பூர்வமான பாரம்பரிய உள்ளூர் இஸ்லாமிய நெறியினுள் ஐ.எஸ் கடும்போக்குச் சிந்தனை வாதமும் வன்முறையும் உள்வாங்கப்படுமானால் நீண்ட காலத்தில் இலங்கைக்கு அது அச்சுறுத்தலாகவே அமையும்.
இலங்கை ஐ.எஸ் அமைப்பினாலும் அதனோடு இணைந்த துணைக் குழுக்களினாலும் உருவாக்கப்படும் கடும் போக்கினையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்
சிரியாவில் 40 இலங்கையர்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைந்திருப்பதாகக் குறிப்பிட்டீர்கள். அவர்களைப் பற்றிய என்ன தகவல் உங்களிடம் இருக்கிறது? அவர்கள் பற்றிய அடையாளங்கள் அரசாங்கத்திற்குத் தெரியுமா?
பதில்: சிரியாவிற்கும் ஈராக்கிற்கும் சென்றிருக்கும் இலங்கையர்களில் பெரும்பாலானோர் இலங்கைக்கு திரும்பிவரவே நினைக்கின்றனர். சிரியாவிற்கும் ஈராக்கிற்கும் செல்வதற்கு இஸ்லாமிய தேச அமைப்பினால் தாம் தவறாக வழி நடாத்தப்பட்டுள்ளோம் என அவர்கள் நம்புகின்றனர். வீடமைத்துத் தருவதாகவும், மாதாந்தம் சம்பளம் வழங்குவதாகவும், அனைத்து வசதிகளுக்கும் மேலதிகமாக அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதாகவும் வாக்குறுதியளிக்கப்பட்டது. நல்ல கல்வி, மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற இனிப்பான பிரச்சாரத்தைப்போல் அவர்களது அனுபவம் இருக்கவில்லை. அவர்கள் உண்மையில் அனுபவித்ததெல்லாம் மின்சாரத் தடை, உணவுத் தட்டுப்பாடு, தொடரான வன்முறைகள் எதிர் வன்முறைகள். போன்றவையாகும்.
இலங்கைத் தலைவர்களைப் பொறுத்தவரை முக்கியமானதொரு விடயம் என்னவென்றால் முஸ்லிம்களுக்கு மிகவும் துன்பத்தை ஏற்படுத்துகின்ற ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகனை கண்டிக்க வேண்டியதே. இலங்கையிலிருந்து சிரியாவிற்குச் சென்ற பெரும்பாலான இளைஞர்கள் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர். அதுமட்டுமல்லாது ஒப்பீட்டு ரீதியில் நன்கு படித்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஐ.எஸ் அமைப்பின் சிந்தனைகளால் கவரப்பட்டிருந்தனர்.
இலங்கையின் முஸ்லிம் தலைவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்னவென்றால் ஐ.எஸ் என்பதில் இஸ்லாமும் இல்லை தேசமும் இல்லை என்பதையும் முஸ்லிம் இளைஞர்கள் அவர்களது பொறியில் சிக்கிவிடக் கூடாது என்பதனையும் தங்களது சமய நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாக வலியுறுத்த வேண்டும்.
ஐ.எஸ் அமைப்பிலுள்ள இலங்கையைச் சேர்ந்த எத்தனை உறுப் பினர்கள் சிரியாவில் இது வரை கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் தெரியுமா?
பதில்: இலங்கையிலிருந்து சென்றோரில் மிகச் சொற்ப எண்ணிகையிலானோரே கொல்லப்பட்டுள்ளார்கள். சிரியா மற்றும் ஈராக்கில் மீதமுள்ள இலங்கையர்கள் எதிர்வரும் மாதங்களில் அல்லது ஆண்டுகளில் ஒன்றில் சிறைப் பிடிக்கப்படுவதற்கோ அல்லது கொல்லப்படுவதற்கோ வாய்ப்புள்ளது. ஐ.எஸ் அமைப்பின் கோரத்தினை உலகம் கண்டுகொண்டது. தற்போது பொதுவாக வினவப்படுகின்ற ஒரு கேள்விதான் ஐ.எஸ் அமைப்பு கலைக்கப்படுமா என்பது. இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால் உலகின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் அதன் கடும்போக்குக் கொள்கை நன்கு வியாபித்துவிட்டது. இதுவே இதிலுள்ள மிகப் பெரும் சவாலாகும்.
ஐ.எஸ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் யுத்தம் எமது பிரதேசத்திலிருந்து மிகத் தொலைவில் நடைபெறுகின்றது. சிரியாவில் யுத்தம் செய்வதற்கு ஆசிய பிராந்தியத்தில் தளமொன்றை அமைப்பதென்பது தர்க்க ரீதியில் பொருத்தமான ஒன்றாக காணப்படவில்லை. அந்த வகையில் வெளிநாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தமொன்று தொடர்பில் நாம் கரிசனை கொள்ள வேண்டுமா? அந்த யுத்தத்தின் காரணமாக எமக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
பதில்: சமூகம் என்ற வகையில் இலங்கை முஸ்லிம்கள் அமைதியினை விரும்புபவர்கள். சிறிய எண்ணிக்கையிலானோரே சிரியாவுக்கும் ஈராக்கிற்கும் சென்றிருக்கிறார்கள். அவர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படவில்லையானால் அவர்களது இஸ்லாமிய சட்டம் மற்றும் தலை துண்டித்தல் உள்ளிட்ட ஐ.எஸ் ஆட்சிமுறையினைத் திணிக்க முற்படுவார்கள். அது இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். மேலும் சிரியாவிலிருந்தும் ஈராக்கிலிருந்தும் திரும்பி வருபவர்கள் ஏனையோருக்கு தமது சிந்தனைகளை ஊட்ட முற்படுவார்கள்.
இது தவிர அவர்கள் ஐ.எஸ் ஜாம்பவான்களாகவே இங்கு பார்க்கப்படுவார்கள். அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படவில்லையானால் வெளிப்படையாகவே கொடூரமானதும் காட்டுமிராண்டித்தனமானதுமான ஐ.எஸ் இன் சுயரூபத்தை வெளிப்படுத்துவார்கள்
சிரியாவிலிருந்து சிலர் இலங்கைவரவுள்ளதாகக் குறிப்பிட்டீர்கள். இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் அறிந்து வைத்துள்ளதா?
பதில்: வெளிநாடுகளுக்கு பயணிப்போர் தொடர்பிலும் சிரியா மற்றும் ஈராக்கில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது .என்பது தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் நன்கு அறிந்து வைத்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறை ஆகியன அச்சுறுத்தல் தொடர்பில் மிகக் கவனமாக அவதானித்து வருகின்றன. இது தவிர, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பான கரிசனையில் உயரளவிலான முன்னுரிமை வழங்கியுள்ளார். தற்போதுள்ள முக்கிய தேவை என்னவென்றால், முஸ்லிம் அமைப்புக்கள் தலைமையேற்று பாதுகாப்பு அமைச்சுடனும், நாட்டின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பொறுப்பாகவுள்ள அரசாங்க முகவர் நிறுவனங்களுடனும் மிக நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.
தெற்காசியப் பிராந்தியத்திலிருந்து எத்தனை பேர் ஐ.எஸ்.அமைப்பில் இணைந்து கொண்டுள்ளனர்?
பதில்: ஐ.எஸ்.அமைப்பு பெருமளவில் மத்திய கிழக்கினை தளமாகக் கொண்டது. உலக முஸ்லிம்களில் 63 வீதமானோர் ஆசியக் கண்டத்தில் வாழ்கின்ற போதிலும் நான்காயிரத்திற்கும் குறைவான ஆசிய நாட்டவர்களே ஐ.எஸ்.அமைப்பில் இணைந்து கொண்டுள்ளனர்.
தற்போது ஒரு நிலை காணப்படுகின்றது, அதாவது வசதிபடைத்த மற்றும் நடுத்தர வர்க்க முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாத்தைப் பற்றி கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.அவர்கள் ஷரீஆ சட்டம் மற்றும் ஏனைய இஸ்லாமிய துறைகளில் மலேஷியா, பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் கற்பதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது இதிலிருந்து நீங்கள் எதனை உணர்கிறீர்கள் ?
பதில்: தற்போது உலகம் முழுவதும் கிறிஸ்தவம், யூத மதம், பௌத்தம், சீக்கிய மதம், இந்து மதம் மற்றும் முஸ்லிம் சமூகத்தில் கூட மத அடிப்படைவாதமும் கடும்போக்கும் புத்துயிர்பெற்று வருகின்றது. அதனை தற்போது கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது. இலங்கையில் மத அடிப்படைவாதத்திற்கும், கடும்போக்கிற்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.
இலங்கை அரசாங்கம் அதற்கான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். இலங்கையின் பண்பாகக் காணப்படுகின்ற பல்லின மற்றும் பல மதங்களைப் பின்பற்றுவோரிடையே ஆரோக்கியமான நட்புறவினைப் பேணுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்திலும் ஆற்றலிலுமே பாதுகாப்பும் ஸ்திரத் தன்மையும் தங்கியுள்ளது. இலங்கை மாணவர்கள் பிரச்சினை நிலவுகின்ற பகுதிகளுக்குச் சென்று தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படக் கூடாது.
உதாரணமாக யேமன், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, மற்றும் ஈராக். இதனை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னணி முஸ்லிம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதேபோன்று சவூதி அரேபியா மற்று ஏனைய நாடுகளில் கல்வி கற்ற பின்னர் நாடு திரும்புகின்ற முஸ்லிம் பிள்ளைகள் தங்களது சமயத்திலுள்ள கடும்போக்கு விடையங்களை பிரச்சாரம் செய்வதைத் தடுப்பது இந்த முன்னணி முஸ்லிம் நிறுவனங்களின் கடமையாகும் ஏனென்றால் அது இலங்கையில் பல்லின மற்றும் பல மதங்களைப் பின்பற்றுவோரிடையே காணப்படும் சமநிலைத் தன்மைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்.
சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை, மாணவர்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படலாமா அல்லது அனுப்பி வைக்கப்படக் கூடாதா என்பது பற்றி முஸ்லிம் தலைவர்களின் ஆலோசனைக்கு அமைவாக அரசாங்கம் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். பல நாடுகள் தற்போது சவூதி அரேபியாவுக்கு மாணவர்களை அனுப்பி வைக்கப்பது தொடர்பில் தயக்கம் காட்டி வருகின்றன. ஏனெனில் சவூதி அரேபியாவில் பின்பற்றப்படுகின்ற கொள்கை, அருகருகே பிற இன மற்றும் மதத்தைச் சார்ந்தோர் வசிக்கும் நாடுகளில் பொருத்தமானதா என்ற கவலையே இதற்குக் காரணமாகும்.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இலங்கைத் தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பிவரும் முஸ்லிம்களுக்கு, பல தலைமுறைகளாக இங்கிருக்கின்ற எமது பாரம்பரிய உள்ளூர் இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும், சவூதி மற்றும் பாக்கிஸ்தான் இஸ்லாத்தைப் இலங்கை மக்களுக்குத் திணிக்கக் கூடாது என்றும் ஆலோசனைகளையும் புத்திமதிகளையும் வழங்க வேண்டும்.
பௌத்த துறவிகள் மதங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம் கிராமங்களுக்கே சென்று தாக்கும் அளவிற்குச் சென்றதால் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் மத்தியில் கோபம் காணப்படுகின்றது. அதேவேளை பாரம்பரிய உள்ளூர் இஸ்லாத்தை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு அறிவூட்ட வேண்டும் என்று நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். இதனை மறுபுறமாக 'பௌத்த துறவிகளுக்கும் அறிவூட்டுங்கள்' என்று அவர்கள் தரப்பிலிருந்தும் கேட்பதற்கான வாய்ப்பிருக்கிறதல்லவா? தற்போது முஸ்லிம்கள் கசப்புணர்வுடன் சிங்கள மக்களிடமிருந்து தனிமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா?
பதில்:முன்பிருந்த இலங்கையின் அரசாங்கங்கள் பௌத்த, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமயத் தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுப்பதற்குத் தவறிவிட்டன. அரசியல் இலக்குகளை அடைந்துகொள்வதற்கு சமயங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது என்ற சட்டம் இலங்கைக்கு மிக அவசியமானது. அற்ப அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக இன மத அடையாளங்கள் பயன்படுத்தப்படுவதை தடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.. அனைத்து மதங்களையும் கொண்ட கட்சியாக அரசாங்கம் அமைய வேண்டும்.
பொதுபல சேனா போன்ற கடும்போக்கு குழுக்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக உணர்ச்சியை கிளறிவிடுகின்ற வகையிலான கருத்துக்களை வெளியிடுகின்றன. அத்தகைய கருத்துக்கள் அவ்வப்போது பெளத்தர்களுக்கும் பௌத்த மதத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. எந்த ஒரு மதத் தலைவரும் மற்றுமொறு மத நம்பிக்கை கொண்ட சமூகத்தினைத் தாக்குவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. அவ்வாறு நிகழுமானால் அது இலங்கையின் பொதுவான அடையாளத்தில் பாரிய சரிவை உண்டாக்கிவிடும். உண்மையில் தனிப்பட்ட கலாச்சாரங்களும், சமயமும் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை இல்லாமல் செய்ய முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு நாம் செய்வோமானால் எமக்கும் மத்திய கிழக்கிலுள்ள ஏனைய நாடுகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
ஏற்கனவே இனங்கள் பிரிந்து போயுள்ளன. மதங்களுக்கிடையிலான பிரச்சினைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. நாம் துருவப்பட்டு விடாது எம்மை நாம் மீளொழுங்கு செய்து கொள்வதற்கு ஏதேனும் வாய்ப்புள்ளதா?
பதில்:தமது சொந்த இனம் மற்றும் மதம் என்பனவற்றிற்கு அப்பால் சிந்திக்கக் கூடிய தூரதிருஷ்டிமிக்க தலைவர்கள் இலங்கைக்குத் தேவை. இனத்தின் அடிப்படையில் அல்லது மதத்தின் அடிப்படையில் மாநிலங்களை உருவாக்கும் இந்திய முறைமையிலிருந்து நாம் விடுபட வேண்டும். நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கே நாம் உழைக்க வேண்டும். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கடும்போக்காளர்களுக்குப் பின்னால் அள்ளுண்டு சென்றுவிடக் கூடாது. எமது இலங்கையில் தேசியத்தையே நாம் உயர்த்த வேண்டும் மாறாக இனரீதியான தேசியத்தையோ அல்லது மத ரீதியான தேசியத்தையோ அல்ல.
ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்சேர்ப்பதற்கான முக்கிய தளமாக மாலைதீவு காணப்படுகின்றது. அது எமது நெருங்கிய அண்டை நாடாகவும் காணப்படுகின்றது. இதனால் இலங்கைக்கு உடனடிப் பாதிப்புகள் ஏதும் உள்ளதா? ஆட்சி மாற்றத்தின் பின்னர் பாதுகாப்பு தளர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் உங்களது கருத்த என்ன?
பதில்: எமக்கு மிக நெருங்கிய அண்டை நாடாக மாலைதீவு காணப்படுகின்றது. அல்-கைதா மற்றும் ஐ.எஸ் அமைப்பு இரண்டினதும் பலமான பிரசன்னம் அங்கு காணப்படுகின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாலைதீவு நாட்டவர்கள் ஒன்றில் அல்-கைதா உடனோ அல்லது ஐ.எஸ் உடனோ இணைந்து சண்டையிடுவதற்காக ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மிகக் குறிப்பிடத்தக்க எண்ணிக்ககையிலான மாலைதீவு மக்கள் பயங்கரவாதிகளினாலும் கடும்போக்குவாதிகளாலும் பிரச்சாரத்தின் மூலம் அடிப்படைவாதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாலைதீவில் அரசாங்கத்திற்கு எதிராகவும், மேற்கத்தேய உல்லாசப் பயணிகளுக்கு எதிராகவும் தாக்குதல்கள் சில இடம்பெற்றுள்ளன. அதேபோன்று, புத்தர் படங்கள் உள்ளிட்ட இஸ்லாத்திற்கு முற்பட்ட அருப்பொருட்கள் மாலைதீவிலுள்ள நூலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரமான தாக்குதலொன்றின்போது அழிக்கப்பட்டன.
இந்தக் கடும்போக்குக் கொள்கைப் பரவலைத் தடுப்பதற்கு மாலைதீவு அரசாங்கம் போதிய நடவடிக்கையினை எடுக்கவில்லை. அதற்குக் காரணம் அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை காணப்படவில்லை. மாலைதீவில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் மிக அவதானமாக இருப்பதோடு இலங்கை அதிகம் யோசிக்காமல், ஐ.எஸ் சிந்தனையைப் பரப்புகின்ற, அதற்கு ஆட்சேர்ப்பில் ஈடுபடுகின்ற மற்றும் பிரச்சனையான பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கின்ற குழுக்களையும் தனி நபர்களை துல்லியமாக அடையாளம் கண்டுகொள்வதற்கான திட்டமொன்றை உருவாக்க வேண்டும். இது தவிர, இலங்கை சமயங்களுக்கிடையிலான எதிர்ப்புணர்வை ஏற்படுத்துவதற்கு எதிரான சட்டமொன்றை உருவாக்க வேண்டும். அதனை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்பதோடு கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு ஆகியவற்றிற்கான இறுக்கமான அறிவுறுத்தல்களை சமய கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் அரசியல்கட்சிகளுக்கு வழங்க வேண்டும்.
பாக்கிஸ்தான், மரேஷியா மற்றும் பங்களாதேஷ் போன்ற முஸ்லிம் நாடுகள் ஐ.எஸ் இன் பிரசன்னம் தமது நாடுகளில் இருப்பதை மறுத்துள்ளன. இந்த 'மறுப்பு' தொடர்பில் பேசப்படாத விடத்து அது பின் விளைவுகளை ஏற்படுத்துமா?
பதில் : இலங்கை முஸ்லிம்கள் ஒரு முன்மாதிரியான சமூகமாகும். அவர்கள் வரலாற்று ரீதியாக பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளதோடு சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுடன் மிக நெருக்கமான உறவினையும் பேணி வந்துள்ளனர். துரதிஷ்டவசமாக, அண்மை ஆண்டுகளில் முஸ்லிம் தலைவர்கள் தமது சமூகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு வீரியமற்றவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் தனிப்பட்ட ரீதியில் என்னிடமும் அரசாங்கத்திடமும் மத்திய கிழக்கு கடும்போக்கு சிந்தனை குறிப்பாக சவூதியிலிருந்து வந்த சலாபிஸம் மற்றும் வஹாபிஸம் போன்றவற்றால் இலங்கையிலிருந்த பாரம்பரிய அழகிய இஸ்லாம் பதிலீடு செய்யப்பட்டுள்ளதகாக தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
இலங்கையின் இஸ்லாமியப் பாரம்பரியம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் அத்துடன் முஸ்லிம்களின் அடையாளமாகக் காணப்படுகின்ற கலாச்சாரத்தையும் செயற்பாடுகளையும் பதிலீடுசெய்கின்ற மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனைகள் அனுமதிக்கப்படக் கூடாது என்பது இதில் முக்கியமான விடயம். இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் சவூதி அரேபியாவாகவோ, சிரியாவாகவோ, ஈராக் காகவோ அல்லது யெமனாகவோ மாறு வதற்கு விரும்பில்லை என்பதில் முஸ்லிம் தலைவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் நன்கு படித்தவர்களாகக் காணப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது தற்போது முஸ்லிம் இளைஞர்கள் மீது செல்வாக்குச் செலுத்திவருகின்ற அடிப்படைவாத கடும்போக்கு சித்தாந்தங்கள் பரப்பப்படுவதற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டினை அவர்கள் எடுத்தல் வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளினால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள தமது பாரம்பரியங்கள் காப்பாற்றிக் கொடுக்கப்படுமான எதிர்கால முஸ்லிம் சமுதாயம் அவர்களுக்கு நன்றியுடையதாக இருக்கும்.
சமூக ஊடகங்களால் முஸ்லிம் இளைஞர்கள் கடும்போக்காளர்களாக மாற்றப்படுவதாக நீங்கள் உணர்கிறீர்களா அது தொடர்பில் நீங்கள் ஏதேனும் ஆய்வினை மேற்கொண்டீர்களா?
பதில் : உலகம் முழுவதிலுமுள்ள இளைஞர்கள் அடிப்படைவாத மற்றும் கடும்போக்கு சிந்தனைகளின் செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கின்றனர். ஐ.எஸ் அமைப்பு இணையத் தளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி வருகின்றது. ஐ.எஸ் அமைப்பு மிக நுட்பமாக இளைஞர்களை கவர்கின்றது. அரசாங்கங்ககளின் வேகம் மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
Correct.srilanka.buddust.country
ReplyDeleteMr Rohan Gunaratna do you know who is IS? Its not a Muslim group. What do you know about Islam? How dare you will say not to follow Saudi Islam in Sri lanka. Entire world is following one Islam religion only. Srilankans also following same Islam religion.
ReplyDeleteIn fact we can realize a considerable change in Rohan’s approach in handling this session. Most of the time his findings are driven out of nothing with full of concoctions and imaginations. However, during this session he has pointed out some reasonable values which need to be appreciated. His view on traditional Muslim Identity of Sri Lanka of course requires further clarity, since Puppet Maulanas, Corrupted Muslim Politicians and Misguided Grave Worshippers are generally his knowledge sharing and gathering partners. It is obvious that due to narrow minded visions of certain uneducated and half-sensed Mullahs who magnify the provisional matters ahead of basic principles and concepts of Islam, there seems to be groups in making to promote extremism in thoughts and actions under the cover of Islam. However Gunaratne should thoroughly learn and understand the true and basic principles of Wahhabis and Salafism before expressing his views or throwing derogatory remarks with respect of the same which are indeed not the root causes of the so called extremism and or terrorism.
ReplyDeleteSir: You were not answering the questions correctly, rather bluffing something else. You know that we know you are a liar. Can you keep your mouth shut please, Thks.
ReplyDeleteiran how much paid you
ReplyDeleteThe truth is exaggerated here I suppose . Some Srilankan
ReplyDeleteMuslims are caught between Iraq and Syria . They are
struggling to get out of this situation and in the
process , a couple of men could have fallen victims.
Some media with vested interests are trying to
magnify the situation to tarnish Muslim's image here
and create tension among anti-Muslim elements .
True , there are some reform seeking Islamic groups
expanding their operations Island wide but that has
nothing to do with creating tensions against any other
faiths . It is all just about perfecting the way
Srilankan Muslims follow their religion and nothing
else . Srilankan Muslims are share holders in any
government formed by any party . This is the best
evidence for the trust they have placed in democracy.
Everything else is rubbish !
I can't understand why the Singapore government is paying for this kind of people ( rohan guns ) this man is number one terrorism creator. for him survive he always must talk this kind of issues to keep him survive. my man shut your mouth
ReplyDeleteI can't understand why the Singapore government is paying for this kind of people ( rohan guns ) this man is number one terrorism creator. for him survive he always must talk this kind of issues to keep him survive. my man shut your mouth
ReplyDeleteஇஸ்லாம் சவுதிக்கோ அல்லது அரபிகளுக்கோ சொந்தமானது இல்லை. இது அல்லாஹாவின் மார்க்கம். அதை அல்லாஹவே அவனுடைய வேதத்தில் தெளிவாக சொல்லி இருக்கான்.
ReplyDeleteذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ
"இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்"(குர்ஆன் 2:2)