பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, மாணவியின் பெரிய மனசு..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனித நேயப்பணியில் அனைவரும் ஈடுபட்டிருப்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியினைச் சேர்ந்த மாணவி ஒருவர் தான் உண்டியலில் சேமித்து வந்த சிறு தொகைப் பணத்தினை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்குமாறு கொண்டு வந்து கொடுத்த சம்பவம் அனைவரையும் ஈர்த்துள்ளது.
கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 500 மாணவிகளும் 17 ஆசிரியர்களும் வெள்ள அனர்த்தத்தில் பாதிப்பிற்குட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ஷாமிலா செரீப்-
Post a Comment