Header Ads



யாழ் பரீத் இக்பாலுக்கு விருது


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பரீத் இக்பால் அவர்கள் கடந்த சில ஆண்டுகளில் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பத்திரிகையில் வெளியிட்டு ஆச்சரியப் படும்  பத்திரிகையாளராக செயற்பட்டு வருகின்றார். வரலாறு உட்பட சமூக விழிப்புணர்வு கட்டுரைகளையும் வெளியிட்டு வருவதன் மூலம் இவர் ஒரு சமூக சேவையாளராகவும் அடையாளப் படுத்தப் பட்டு தேசோதய தீபம் எனும் விருதினை சர்வோதய  நிறுவனம் இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. 

126 நபர்களுக்கு வழங்கப் பட்ட இவ்விருதுகளில் மூன்றூ விருதுகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு வழங்கப் பட்டது. பரீத் இக்பால் , எம்.எல்.லாபிர், அப்துல் ரஹீம் ஆகியோர்  இவ்விருதுகளை பெற்றுக் கொண்டனர். 

இக்பாலுக்கான விருது சர்வோதய அமைப்பின் தலைவர் கலாநிதி ஆரியரதன் அவர்களால் வழங்கப் பட்டது.

அண்மைக் காலத்தில் பல்வேறு பத்திர்கைத் துறை விருதுகளையும், சமூக சேவை  பரீத் இக்பால் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு யாழ் முஸ்லிம் சாதனையாளர் பாராட்டுக் குழு சார்பில்  எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எம்.எஸ்.எம். ஜான்சின்


No comments

Powered by Blogger.