Header Ads



சிங்கத்தை போல ஜனாதிபதி கர்ச்சித்த போதும், வரி அறவீடு அமுலுக்கு வந்துள்ளது

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமை தற்போது தெளிவாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -02- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அதேபோல் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக செயற்பட்ட சிலருக்கு தற்போது பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது நகைப்புக்குரிய விடயம்.மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு இன்றுடன் நீக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வரிகளை விதிக்க போவதில்லை என ஜனாதிபதி பொலனறுவையில் சிங்கத்தை போல் கர்ச்சித்தார்.

ஆனாலும் இன்று முதல் பெறுமதி சேர் வரி அறவீடு அமுலுக்கு வந்துள்ளது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.