சிங்கள ஆசிரியர்களுக்கு ஜிஹாத், அமைப்பின் பெயரில் எச்சரிக்கை கடிதம்
கண்டி - மடவளையில் சிங்கள ஆசிரியர்களுக்கு ஜிஹாத் அமைப்பொன்றின் பெயரில் எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
கடிதம் கிடைக்கப்பெற்ற சிங்கள ஆசிரியை ஒருவருடைய கணவர் இதகுறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இன்று -29- கண்டியில் நடைபெற்ற நிகழ்விலேயே ஹக்கீம் இதனை தெரிவித்தார்.
இது ஒரு போலியான இனவாத பிரச்சாரமென குறிப்பிட்ட ஹக்கீம் இப்பிரதேசத்தில் அப்படியொன்றும் இல்லை எனவும் தனிப்பட்ட பிரச்சினைகளை சிலர் இனவாத தீயை பரப்ப முயுலுவதாகவும் குற்றம் சுமத்தினார்.
இது ஒரு போலியான இனவாத பிரச்சாரமென குறிப்பிட்ட ஹக்கீம் இப்பிரதேசத்தில் அப்படியொன்றும் இல்லை எனவும் தனிப்பட்ட பிரச்சினைகளை சிலர் இனவாத தீயை பரப்ப முயுலுவதாகவும் குற்றம் சுமத்தினார்.
செய்தி மூலம் - DC

Post a Comment