Header Ads



தலிபான்கள் தமது புதிய தலைவரை அறிவித்தனர் - 2 துணைத் தலைவர்களும் நியமனம்

தாலிபான் தலைவர் முல்லா அகத்தர் மன்சூர் , பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சில நாட்களில், ஆப்கான் தாலிபான், ஒரு புது தலைவரை நியமித்துள்ளதாக கூறியுள்ளது.

தாலிபானின் பிரதிநிதி, ஹைபத்துல்லா அக்ஹுந்த்சாதாவை இயக்கத்தின் புதிய தலைவர் என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

முல்லா ஹைபத்துல்லா, முல்லா அகத்தர் மன்சூருக்கு துணைத் தலைவரகவும், தாலிபான் நீதித்துறையின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர்.

காபூலில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட வலையமைப்பைச் சேர்ந்த் சிராஜுதீன் ஹக்கானி மற்றும் , தாலிபானின் நிறுவனர் முல்லா ஓமரின் மகனான முகம்மது யாகூப் ஆகியோர் புதிய துணை தலைவர்களாக அறிவிக்கபட்டுள்ளனர்.

முல்லா மன்சூரின் இறப்பை இப்போது தான் முதல் முறையாக தாலிபான் ஒப்புக்கொண்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.