Header Ads



சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர், 28 வருட ஊடகசேவைக்காக கௌரவிக்கப்படுகிறார்

மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதரின் 28 வருட ஊடக சேவையை கௌரவிக்கும் வகையில் மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழாவும்,அவர் பற்றிய மலர் வெளியீடும் நாளை சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மருதமுனை மருதூர்கனி நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் கவிஞர் எம்.பி.அபுல் ஹஸன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த பாராட்டு விழாவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லா, கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ் அஹமட் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

இதன்போது பத்திரிகையாளர் காதரை வாழ்த்தி எழுதப்பட்ட கட்டுரைகள் மற்றும் கவிதைகளின் தொகுப்புகள் அடங்கிய 'தீராமை' எனும் மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

கவிஞர் ஏ.எம்.குர்சித் நன்றியுரையாற்றவுள்ளார். ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சினாஸ் விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கவுள்ளார்.

Aslam S.Moulana


No comments

Powered by Blogger.