Header Ads



அரநாயக்கவில் 14 பேரின், உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு

கேகாலை அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தவர்களில் 11 பெண்கள் 05 ஆண்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் 14 பேரின் உடற்பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய அரநாயக்க மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களில் 30 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மண்சரிவில் சிக்கி காணாமற்போயுள்ளவர்களில் 77 பெண்களும் 62 ஆண்களும் அடங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.