Header Ads



மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கம் - 102 இராணுவத்தினர் தலைமையகம் திரும்புகின்றனர்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு திடீரென மீளப்பெறப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 102 இராணுவத்தினரையும் இன்றிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.

குறித்த பாதுகாப்பு கடமையிலீடுபட்டிருந்த 102 இராணுவத்தினரையும் இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் இராணுவத் தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.