ரஞ்சன் தொடர்பில் Unp அமைச்சர்கள் விசனம், அவதானத்துடன் செயற்பட ரணில் அறிவுறுத்தல்
சமூக நல பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவால் ஐக்கியதேசிய கட்சி விமர்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கட்சியின் கூட்டத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சர்களான தலதா அத்துகோரல, ஜோன் அமரதுங்க,விஜயதாச ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் ரஞ்சன் ராமநாயக்கவின் செயற்பாடுகளை விமர்சித்ததோடு இவரால் கட்சி பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பிரதமரால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment