கட்டாரில் சன்மார்க்க சொற்பொழிவுகள்
கட்டார் வாழ் இலங்கை இந்திய சகோதர சகோதரிகளுக்காக, தமிழ் தஃவா களத்தில் பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் அஷ்ஷெய்க்.முர்ஷித் அப்பாஸி கலந்து சிறப்பிற்கும் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் எதிர்வரும் 23,24 25 ம் திகதிகளில் இலங்கை தஃவா நிலையம் (SLDC) ஏற்பாடு செய்துள்ளது .
இன்ஷா அல்லாஹ் முறையே எதிர்வரும் : வியாழன் 23/3/2016 அன்று மாலை 8:45 மணியிருந்து 10:00 வரை குடும்ப சகிதம் கலந்து பயன்பெறும் வகையில் எயர்போர்ட் ஏரியாவில் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அசீஸ் கஷ்ஷாபி பள்ளிவாயலில் "அல்லாஹ்வின் அருளைப் பெற்ற குடும்பம்" என்ற தபைப்பிலும்
வெள்ளி ஜும்மாத் தொழுகையைத் தொடர்ந்து பனார் 4ம் மாடியில் அமைந்துள்ள 3ம் வகுப்பறையில் "இஸ்லாத்திற்காக நாம் செய்தவை எவை " என்ற தலைப்பிலும்
சனிக்கிழமை பெண்கள் மாத்திரம் கலந்து பயன்பெறும் ஒரு நிகழ்ச்சி "முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்" என்ற தலைப்பிலும் உரைகள் நிகழ்த்தபடும் .
கட்டார் வாழ் உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தகவல்
Media Unit

kindly correct the dates as 24,25,26 March.
ReplyDelete