Header Ads



"தேங்காய் உடைக்கப்போன இடத்தில்..."

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு எதிராக தேங்காய் உடைக்க சீனிகம ஆலயத்திற்கு சென்றிருந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் பணப்பை திருட்டு போயுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் பணப்பை மாத்திரமல்லாது ஊடகவியலாளர் உட்பட சிலரது பணப் பைகளும் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் ஆலயத்தில் அருகில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து தினேஷ் குணவர்தன உட்பட மேலும் இருவரது பணப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தினேஷ் குணவர்தனவின் பணப் பை காணாமல் போயுள்ளதாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்ததை அடுத்து அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் பணப்பை மீட்கப்பட்டுள்ளது. தினேஷ் குணவர்தன எவ்வளவு பணம் வைத்திருந்தார் என்பது தெரியவரவில்லை.

சீனிகம ஆலயத்திற்கு தேங்காய் உடைப்பதற்காக சுமார் 1100 பேர் சென்றிருந்ததாக புலனாய்வு தரப்பினர் கூறுகின்றனர்.

5 comments:

  1. அடடா!

    தேங்காய் உடைக்கப்போன இடத்தில்தான் எத்தனை குழப்பங்கள்.. உடைத்த தேங்காய்கள் தோட்டமொன்றில் களவாடியவை எனும் செய்தி வெளிவந்து ஆறுவதற்குள் பணப்பை திருடுபோன செய்தி..பாவம், கூட்டு எதிர்க்கட்சியினருக்கு தேங்காய் உடைப்பதில்தான் எத்தனை மண்டையை உடைக்கும் இடைஞ்சல்கள் பாருங்கள்! பேசாமல் 'திருட்டு எதிர்க்கட்சியினர்' என்று பெயரை மாற்றி வைத்துவிடலாம்!

    ReplyDelete
  2. கள்ளனுக்கும் சேர்த்து தேங்காய் உடைக்க வேண்டியதுதான்.மோசடிக்காரனை போலிஸ் பிடித்தால் அவனை விடுவிக்க வேண்டும் என்று மோடத்தனமாக தேங்காய் உடைத்தால் இவர்கள் எவ்வாறு நாட்டை ஆட்சி செய்வார்கள்.

    ReplyDelete

  3. seytha kalavo miosadiya maraika theynga odakim kallar kootam world recorad

    ReplyDelete

  4. seytha kalavo miosadiya maraika theynga odakim kallar kootam world recorad

    ReplyDelete
  5. Waste of National Wealth... Howmany poor people are around the country ? Could have donated this coconut for them make ROTTY and have their simple food for a day.

    ReplyDelete

Powered by Blogger.