Header Ads



கழுத்தை அறுத்து தற்கொலை செய்வேன், யோசித்த குறித்தும் வாய் திறக்கமாட்டேன் - மகிந்த

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வங்கிகளில் தாம் பாரியளவில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லவில் புதிய அரசியல் கட்சி அலுவலகம் ஆரம்பித்த போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் இவ்வாறு பணம் பதுக்க வைத்திருப்பதாக குற்றம் சுமத்துவோர் அது குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமது ஒரு புதல்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு புதல்வர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யோசித ராஜபக்ஸ விடயம் தொடர்பில் எதுவும் கூறப் போவதில்லை எனவும், வழக்கு விசாரணைகளை பூர்த்தியாகும் வரையில் எதனையும் கூறப் போவதில்லை என அவர்தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. அன்மையில் பிரதமர் தாங்கள் சார்பாக விடுத்த மரியாதைப்பற்றுக்கு பின்தான் இந்த கௌவ்ரவப்பேச்சு வெளிவந்துள்ளது எல்லாம் உள் குத்தும் வெளிக்குத்தும்தான் போல்.....

    ReplyDelete
  2. மகனே கொஞ்சம் பொறுடா தெய்வத்தின்தண்டணை உமக்கு கூடிய சீக்கிரம் கிடைக்கும் ஓரு சிற்றெறும்பால் யானையை வீழ்த்த முடியும்,,என்பதை மறவாதே...காலம் பதில் சொல்லும்,

    ReplyDelete
  3. இல்லை, மகிந்தர் கூறுவது உண்மையாகவே இருக்கவும் வாய்ப்புள்ளதை மறுக்கமுடியாது.

    காரணம், அவருடைய பெயரில் பணம் பதுக்கப்படாமல் வேறு பெயரில் (பினாமிகள்) இருக்கலாம் போல. இது எப்படியிருக்கின்றதால் யாராவது சத்தியம் புரியும்படிகேட்கும்போது சிலர் மனதுக்குள் 'அ' வைப்போட்டுக்கொண்டு சத்தியமாக என்று கூறி மற்றவரை ஏமாற்றுவதுண்டு.

    ஆனால் மகன்களின் (யோஷித) விடயத்தில் 'கழுத்தை அறுத்துக்கொள்வேன் என்றெல்லாம் அவரால் கூறமுடியாதல்லவா.. அதிலிருந்தே உலகிற்குப் புரியுமே உண்மை.

    ReplyDelete
  4. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறையில் வாழ்ந்து என்ன பயன் என்று நினைத்திருப்பார்.

    ReplyDelete
  5. கொஞ்சம் பொறுங்கள் கட்டாயம் கழுத்தை அறுத்துட்டு சாக வேண்டி வரும் என்னை அசைக்க முடியாது என்று சொன்ன உன்னை அல்லாஹ் எவ்வாறு ஒரு பிரதேச சபை உரிப்பினரைவிட கேவலமான முறையில் வீட்டுக்கு வீடு பன்சலக்கு பன்சலை ஏறி இறங்கி கேவலப்பட்டு திருயும் நிலையை யார் தந்தானோ அவனே உன்னை இன்னும் பல பிடிகளை கொண்டு பிடிப்பான் நீ செய்ததை நினைத்துப்பார் நீ எதிர்த்தது உன்னையும் இந்த உலகத்தையும் படைத்த அல்லாஹ்வை, அவனின் வேதத்தை, அவனின் மாளிகையான பள்ளிவாசல்களை,இதுக்கல்லாம் இன்னும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று னாக்களும் எதிர் பார்த்துக்கொண்டுதான் பொறுமையாக இருக்கிறோம் அல்லாஹ் எதிர்த்தவனின் பரம்பரை உலகத்தில் தலை நிமிர முடியாது (பிரவ்னின் அபுஜாஹில் போன்றோரின் பரம்பரை உலகில் இல்லை. (நபியே கவ்சறை (எண்ணற்ற நன்மைகளை )உமக்குக் கொடுத்திருக்கிறோம்
    ஆகவே நீர் உமதிரச்சகனை தொழுது இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை)அறுப்பீராக
    நிச்சயமாக உம்பகைவன்(எவனோ)அவன்தான் சந்ததியற்றவன்.சூரா 108.வசனம் 1,2,3.

    ReplyDelete
  6. Mr group already surrounded.theycant escape any more.lets see in the future.they will go one by one to JAIL

    ReplyDelete
  7. Third class , uncivilized utterance ! Is this the kind of talk
    we want to hear from a 40 yrs experienced politician who led the
    country for twelve years and who spoke at the UN many times ?
    This clearly shows where he belongs!

    ReplyDelete

Powered by Blogger.